தீயின் பின்னணியில் இருப்பவர்களை அம்பலப்படுத்துவோம்!! (வீடியோ)

பிரதமர் ரணில் விக்கிரமைசிங்கவின் பிரத்தியேக இல்லத்தின் மீது தீயை வைத்தவர்கள் என்பதை அம்பலப்படுத்துவோம் என ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
போராட்டம் என்ற பெயரில் நடத்தப்பட்ட மோசமான சம்பவமே இந்த தீவைப்பு சம்பவம் என தெரிவித்துள்ள அவர்,இதன் பின்னணியில் தனியார் ஊடக நிறுவனம் ஒன்றும் அரசியல் கட்சி ஒன்றும் உள்ளது என்றார்.
இந்த சம்பவம் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எனவே இதனுடன் தொடர்புடையவர்கள், அவர்களின் அரசிளல் பின்னணி உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் சாட்சிகளுடன் எதிர்வரும் வாரங்களில் அம்பலப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.