;
Athirady Tamil News

பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை விடுத்த பதில் ஜனாதிபதி!!

0

ஜனாதிபதியை தெரிவு செய்வதில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமைக்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக செல்வாக்கு செலுத்துபவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

சமூக ஊடகங்கள் ஊடாக விடுக்கப்படும் அச்சுறுத்தல்களினால் சுதந்திரமாக வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த அறிவித்தலை கருத்திற்கொண்டு பதில் ஜனாதிபதி பாதுகாப்பு தரப்பினருக்கு இந்த பணிப்புரையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, பாராளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டம் மற்றும் அது தொடர்பான குற்றவியல் சட்டங்களின் கீழ் இது தொடர்பான சம்பவங்களை விசாரிக்குமாறு அவர் அறிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.