;
Athirady Tamil News

கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு அடுத்த வாரம் திரும்புகிறாரா?

0

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் 24ம் தேதி மீண்டும் தாயகம் திரும்பவுள்ளதாக ராஜபக்ஷ குடும்பத்தின் உறவினரும், ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க தெரிவிக்கின்றார்.

ரஷ்யாவுக்கான தூதுவராக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில், இடம்பெற்றதாக கூறப்படும் மிக் (MIC) விமான கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று இடம்பெற்றது.

இந்த விசாரணைகளின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கோட்டாபய ராஜபக்ஷ தன்னுடன் தொடர்பில் இருப்பதாகவும், எதிர்வரும் 24ம் தேதி அவர் நாடு திரும்பவுள்ளதாகவும் உதயங்க வீரதுங்க தெரிவிக்கின்றார்.

நாட்டிற்கு வருகைத் தரும் கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டிற்காக சேவையாற்ற எதிர்பார்த்துள்ளதாக கூறிய அவர், அரசியலில் அவர் ஈடுபட போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.

கோட்டாபய ராஜபக்ஷ அரசியல்வாதி என்ற விதத்தில் திறமையானவர் கிடையாது எனவும், நிர்வாகியாக திறமையானவர் எனவும் அவர் கூறினார்.

கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 24ம் தேதி நாடு திரும்புகின்றார் என்பதை பொறுப்புடனான கூறுகின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பினர்.

”சில சந்தர்ப்பங்களில் மாற்றங்கள் வரலாம். இன்று பொறுப்புடன் கூறுகின்றேன். நாளை சில வேளைகளில் மாற்றம் வரலாம். அவர் தேதியை மாற்றினால், ஒன்றும் செய்ய முடியாது” என அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே காரணம் என தெரிவித்து, மக்கள் சுமார் நான்கு மாத காலம் போராட்டங்களை நடத்தியிருந்தனர்.

இந்த போராட்டங்கள் வலுப் பெற்ற நிலையில், கடந்த ஜுன் மாதம் 9ம் தேதி கொழும்பை லட்சக்கணக்கான மக்கள் சுற்றி வளைத்து, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், பிரதமரின் வாசஸ்தலம் ஆகியவற்றை கைப்பற்றியிருந்தனர்.

இதையடுத்து, தலைமறைவான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கடந்த மாதம் 13ம் தேதி மாலைத்தீவு சென்று, அங்கிருந்து 14ம் தேதி சிங்கப்பூர் பயணமானார்.

சிங்கப்பூரிலிருந்து தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிய கோட்டாபய ராஜபக்ஷ, சிறிது காலம் சிங்கப்பூரிலேயே தங்கியிருந்தார்.

அதன்பின்னர், சிங்கப்பூரிலிருந்து கடந்த 11ம் தேதி தாய்லாந்து நோக்கி தனது மனைவியுடன் பயணித்த கோட்டாபய ராஜபக்ஷ, தற்போது அங்கு தங்கியுள்ளார்.

வெளிநாட்டில் தங்கியுள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் செலவீனங்கள் அனைத்தும், அவரது சொந்த பணத்திலேயே செலவிடப்பட்டு வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவது தொடர்பில் இதுவரை தமக்கு அறிவிக்கப்படவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

இலங்கையில் சீன கப்பல் – இந்திய கடல் பகுதியில் தீவிரம் அடைந்த கண்காணிப்பு!!

இலங்கையில் சீனக் கப்பல் – கடல் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ள இந்திய கடற்படை! (படங்கள்)

யுவான் வாங் 5: இலங்கை துறைமுகத்தில் சீன கப்பல் – இந்திய பெருங்கடலில் ஆதிக்கத்தை சீனா உறுதிப்படுத்தியதா? (படங்கள்)

சீன கப்பல் எதிரொலி: தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு!!

சீன கப்பல் வரும் முன்பே இலங்கைக்கு இந்தியா வழங்கிய கண்காணிப்பு விமானம்!! (படங்கள்)

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சர்ச்சைக்குரிய சீனக் கப்பல் !!

சீன கப்பல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் அறிவிப்பு!!

சீனா உளவு கப்பல் விவகாரம்: இந்தியாவின் எதிர்ப்பால் அனுமதி ரத்து?

அம்பாந்தோட்டா துறைமுகத்துக்கு சீனாவின் உளவு கப்பல்- ஒருவழியாக ஒப்புக் கொண்டது இலங்கை.. ஆனால்?

இலங்கை பொருளாதாரம் : அடுத்த 6 மாதங்களில் வரிசைகட்டி நிற்கும் பிரச்னைகள்!! (படங்கள்)

’வந்து எனக்கு வீடு கட்டித் தாருங்கள்’

கடும் பொருளாதார நெருக்கடி; இலங்கைக்கு உதவ முடியாது. . கை விரித்த உலக வங்கி!! (படங்கள்)

இலங்கை மக்களுக்கு உதவி செய்ய தயார்: இந்திய ஜனாதிபதி !!

கடும் பொருளாதார நெருக்கடி; இலங்கைக்கு உதவ முடியாது. . கை விரித்த உலக வங்கி!! (படங்கள்)

அமரகீர்த்தி கொலை வழக்கு; மேலும் 8 பேருக்கு வலைவீச்சு!! (வீடியோ)

சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் அழைப்பு!!

காலிமுகத்திடல் போராட்டத்தில் இருந்து விலகும் அமைப்பு!!

ஆர்ப்பாட்டகாரர்களுக்கு ஆதரவாக மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்!!

போராட்டத்திலிருந்து விலகியது ‘ப்ளக் கெப்’ !!

சிறைச்சாலையை தயார்ப்படுத்துங்கள் !!

அவசரகால சட்டத்தால் சர்வதேச உதவிகளை இலக்கும் அபாயம் !!

தேசிய வங்கிக்கட்டமைப்பு அபாயத்துக்கு உள்ளாகலாம் !!

விமான நிலையங்களுக்கு அனுப்பப்படும் கைவிரல் ரேகை பதிவுகள்!

நள்ளிரவு முதல் நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு! அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!!

’பட்டலந்த ரணில் நிரூபிக்க தவறிவிட்டார்’

அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் குறைக்கப்படும்!!

பெத்தும் கேர்னர் கைது !!

இலங்கையில் கொந்தளிப்புக்கு மத்தியில் ராணுவம் கட்டுப்பாட்டுடன் செயல்படக்காரணம் என்ன? (படங்கள்)

அவசர காலச்சட்டம் நிறைவேறியது !!

கொழும்பில் மற்றுமொரு போராட்டம்! புகையிரத நிலையத்திற்கு முன்னால் திரண்ட போராட்டக்காரர்கள்!!

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களே உள்ளனர் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!!

கோட்டாவுக்கு மேலும் 14 நாட்கள் அவகாசம் !!

போராட்டங்களுக்கு செவிசாய்க்க தயார்! ஆனால் பயங்கரவாதத்தை ஏற்க மாட்டோம்: பிரதமர்!!

விசா காலம் நீடிப்பு! கோட்டாபயவின் அடுத்த திட்டம் அம்பலம்!!

இலங்கையில் இயல்புநிலை திரும்புகிறதா? எரிபொருள் நிலையங்களில் குறையும் கூட்டம்!! (படங்கள்)

கோத்தபய தப்பி ஓடவில்லை. . விரைவில் வந்துவிடுவார். . இலங்கை அமைச்சர் பேச்சு!! (படங்கள்)

விமானத்தில் வைத்து போராட்டக்காரர் கைது!! வீடியோ

காலி முகத்திடலில் பதற்றம் !!

கோட்டா விரைவில் திரும்புவார்: அரசாங்கம் !!

இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம் – சஜித்!!!

சீனாவுக்கு செல்கிறார் ஜனாதிபதி ரணில் !!!

பொருளாதார மீட்சிக்கு வலியுடன் கூடிய சிகிச்சை வேண்டும் – இந்திரஜித் !!

செப்டெம்பரில் இலங்கைக்கு புதியதொரு நெருக்கடி – பாக்கியசோதி!!

100 நாட்களுக்கு பின்.. மீண்டும் செயல்பட தொடங்கிய இலங்கை அதிபர் அலுவலகம்! இயல்புநிலை திரும்புமா? (படங்கள்)

இலங்கைக்கு நிதி கொடுக்காதீங்க.. ஜப்பானிடம் பற்ற வைத்த ரணில்? விக்கிலீக்ஸ் வெளியிட்ட சீக்ரெட்? (படங்கள்)

கோட்டாவுக்கு எதிராக சிங்கப்பூரில் குற்றவியல் முறைப்பாடு !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.