விமானப்படை விமானத்தில் பறந்தார் கோட்டா !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வௌியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமானப்படை ஜெட் விமானத்தில் மாலைதீவின் தலைநகரான மாலேவுக்கு ஜனாதிபதி பயணித்ததாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளூர் நேரப்படி அதிகாலை 03:00 மணிக்கு (22:00 GMT) மாலேயை சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.