;
Athirady Tamil News

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் இன்னும் கிடைக்கவில்லை!!

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் குறித்து இன்று (13) அறிவிப்பார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இராஜினாமா கடிதம் இன்னும் தமக்கு கிடைக்கவில்லை என்றும், கடிதம் கிடைத்தவுடன் நாட்டுக்கு உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் சபாநாயகர் எமது செய்திப்பிரிவிடம் தெரிவித்தார்.

கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று தனது பதவியை இராஜினாமா செய்வதாக சபாநாயகரிடம் தெரிவித்திருந்தார்.

அதன்படி, உரிய இராஜினாமா கடிதம் கிடைத்தவுடன், இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.