;
Athirady Tamil News

பதில் ஜனாதிபதியின் விஷேட அறிவிப்பு (காணொளி)

0

பதில் ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

நாட்டின் நிலைமையை கட்டுப்படுத்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களின் போது, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறும் ஆயுதப்படை மற்றும் பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், போராட்டக்காரர்கள் பாசிசத்தை நாடுவதாக குற்றங்சாட்டியுள்ள அவர், இந்த முயற்சிகளைத் தடுக்கவும், நாட்டில் இயல்புநிலையை மீட்டெடுக்கவும் அவசரகால விதி மற்றும் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என்றும் கூறினார்.

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டக்காரர்கள் குழுவொன்று இன்று (13) பிரதமர் அலுவலகம், கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகளின் வீடுகளை முற்றுகையிட சதி செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.