;
Athirady Tamil News

சபையை நாளைக்கு கூட்டுவதில் சிக்கல் !!

0

பாராளுமன்றத்தை நாளை (15) ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசேடமாக் கூட்டுவதில் சிக்கலான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்றக் கூட்டத்தொடரின் அடுத்த அமர்வு, எதிர்வரும் 19ஆம் திகதியே கூடவேண்டும். எனினும், கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய நாளை (15) அவசரமாகக் கூட்டத் தீர்மானிக்கப்பட்டது.

எனினும், அவ்வாறு சபையைக் கூட்டவேண்டுமாயின் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவேண்டும். அதுவும் 24 மணிநேரத்துக்கு வெளியிடவேண்டுமெனவும் அறியமுடிகின்றது.

இந்நிலையில், நாளை (15) கட்சித் தலைவர்களின் கூட்டமொன்று காலை நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.