சர்வதேச மகளிர் தினம் இன்று.. ஈழவிடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு..!!! (சாகரன்)


Warning: strpos() [function.strpos]: Offset not contained in string in /usr/www/users/webone/wp-content/themes/options/app/loop-functions.php on line 69

சர்வ தேச மகளிர் தினம் இன்று. ஈழவிடுதலைப் போராட்டப் போக்கில் பெண்களின் பங்கு பற்றிய விடயங்களின் அடிப்படையில் இவ்தினத்தை சற்ற பார்ப்போம். இன்று நேற்று மட்டும் அல்ல ஆதிப் பொதுவுடைமைச் சமுதாயத்தில் இருந்து இன்றைய ஜனநாக, சோசலிஷ, முதலாளித்துவ சமுதாய அமைப்புகள் வரை நிர்வாகத்தில் சிறந்து விளங்குவது பெண்களே. ஆண் மேலாதிக்க சமுதாயம் இதனை ஏற்காமல் அவளை அடுப்பங்கரையிலும் ஆத்துக்குள்ளும் முடக்கி. அடக்கி ஒடுக்கி வைத்திருப்பதுவுமான நிலமைகளே பெண்கள் விடயத்தில் மேலோங்கி இருக்கின்றன. இதனை உடைத்தெறிய புறப்பட் பெண் போராளிகள் பலரைக் கொண்டதே ஈழவிடுதலைப் போராட்ட வரலாறு. ஈழவிடுதலைப் போராட்டத்தின் 80களில் பெண்விடுதலைக்கான முஸ்தீபுகள் மிகவும் ஆரோக்கியமாக ஆரம்பித்திருந்தன. குறிப்பாக ஈபிஆர்எல்எவ், புளொட், ஈரோஸ் போன்ற விடுதலை அமைப்புக்கள் பெண்கள் விடுதலை தேசியவிடுதலைப் போராட்டத்தின் ஒரு அங்கம் என்றும் தேச விடுதலையைத் தொடர்ந்த வர்க்க விடுதலை என்பது பெண்களின் விடுதலை இல்லாமல் இல்லை என்பதை கோட்பாடாக ஏற்றுக் கொண்டு பெண்களையும் தமது விடுதலை அமைப்புக்களில் இணைத்து செயற்பட்டு வந்தனர். பெண்விடுதலையை முன்னெடுக்கும் முகமாக பத்திரிகைகள், போராட்டங்கள், அரசியல் வகுப்புக்கள், பாசறைகள் என அவர்களின் செயற்பாடுகள் நீண்டு கொண்டே வந்தன. புளொட்டில் சாந்தி, கலா என பெண் போராளிகளும் ஈபிஆர்எல்எவ் இல் அஞ்சலி ஞானா அக்கா, தாரணி, பானு, மேரி, அம்பிகா என்று பெண் போராளிகளின் பட்டியலும் நீண்டு விரிந்து போகின்றது. இப் பெண் போராளிகள் வெறும் துப்பாக்கிளை ஏந்த மட்டும் பாவிக்கப்படவில்லை. மாறாக பெண்களின் விடுதலைக்காக அவர்கள் ஈழவிடுதலைப் போராட்டத்தில் இணைந்து செயற்பட்டதாகவே வரலாறு பதிவு செய்துள்ளது. 80 களின் நடுப்பகுதியில் தொடர்ந்த புலிகளின் மாற்ற அமைப்புக்களைத் தடை செய்தல் என்ற நிகழ்வுகளினால் இவர்கள் தொடர்ந்தம் தமது பெண் விடுதலைக்கான செயற்பாட்டை முன்னெடுக்க முடியாமல் போனது இன்று வரை தொடர்கின்றது. புலிகளின் மாற்று கருத்தாளர்கள் மீதான துப்பாக்கித் தடைகள் அன்று ஏற்படாவிட்டால் இன்று ஈழத்து பெண்களின் விடுதலை இன்னும் முன்னேற்றகரமான ஒரு பாதையில் மேலும் உக்கிரமாக முன்னெடுத்துச் செல்லப்பட்டிருக்கும். தமது விடுதலைக்காகவும் ஈழவிடுதலைக்காகவும் வர்க்க விடுதலைக்காகவும் அவர்களால் நடாதப்பட்ட பத்திரிகைகள், வெளியீடுகள் இன்று பதிவுகள் இன்று மறைக்கப்பட்டாலும் அவர்களின் பெண்விடுதலைக்கான செயற்பாட்டின் தாக்கங்கள் இன்றும் எம் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. புலிகளைப் பொறுத்தவரையில் தமது இராணுவ செயற்பாடுகளுக்கு பாவித்தல் என்ற அணுகு முறையே பெண்கள் விடயத்தில் அவர்கள் பெரிதும் கையாண்டு வந்தனர். யாழ்பாண மத்தியதர வர்க்க குணாம்ச சிந்தனையை அடிப்படையாக வைத்தே பெண்களை குறி வைத்து அடல் பாலசிங்கம் அணிதிரட்டினார். 1000 ரூபாய் மாதக் கொடுப்பனவு, புது ஏசியா பெண் துவச்சக்கர வண்டி, நீலநிற அழகு கைப்பை ‘புதிய பறவையடா! கவனம்’  என்ற  எச்சரிகையை கொடுக்கும் மிரட்டல் பார்வை  என்ற அணுகு முறமையை கொண்டு பெண்களை அணிதிரட்டினர். உளவு பார்த்தல் என்ற நடைமுறைக்களுக்குள் இவர்களை மட்டுப்படுத்திக் கொண்டனர். முள்ளிவாய்காலில் புலிகளின் மரணம் சங்கமிக்கும் வரை புலிகளின் ‘பெண்விடுதலை’ இராணுவத்துடன் துப்பாக்கிச் சமரில் மடிதல் என்ற வளர்ச்சிப் போக்கு வரையும்தான் வளர முடிந்தது. அதுவரைதான் வளரவும் விட்டடார்கள் புலிகளில் இருந்து ஆணாதிக்கவாதிகள். வாழ்கைத் துணைவரைக் ‘கொன்றுவிட்டு வெள்ளை சீலை கொடுத்தனுப்புதல்’ என்ற வக்கிரமான படுபிற்போக்குத்தனமான அணுகுமுறையை மட்டும் புலிகள் கொண்டிருந்தனர். இது மாத்தையாவின் மனைவிக்க மட்டும் அல்ல பல இடங்களில் புலிகளினால் பாவிக்கப்பட்ட ‘முற்போக்கு’ செயற்பாடு ஆகும். புலிகளின் பெண் தளபதிகளும் இதனை ஏற்றே இருந்தனர். போரின் கொடுமைகளினால் புலம் பெயர்ந்த பெண்கள், புலம் பெயர்நாடுகளில் நிலவும் டாலர்களை ஈட்டும் பொருளாதார சுதந்திரம் ஈழத்துப் பெண்களையும் தைரியமாக சுதந்திரமாக முடிவெடுக்கும் நிலைகளுக்கு தள்ளியிருக்கின்றது என்பது ஒரு ஆரொக்கியமான நிலமையாக இருக்கின்றது. இதன் மறுபுறத்தில் குடும்ப உறவுகளில் முரண்பாடுகள், பிரச்சனைகள் ஏற்படும்போது குந்தி இருந்து பேசித்தீர்க்கக் கூடிய பிரச்சனைகளையும் ‘எடுத்தேன் முடித்தேன்’ என்று தனியாக பிரிந்து பிள்ளைகளைத் தவிக்கவிடும் நிலைமைகளை ஏற்படுத்தியும் இருக்கின்றது. இதன் அர்த்தம் ஆணாதிக்கத்திற்கு அடங்கி ஒடுங்கி அடிமையாக இருத்தல் என்பதல்ல. பிள்ளைகளை முன்னிலைப்படுத்தி மண முறிவைத்த விர்த்தல் என்று அணுகுமுறையை முன்னிலைப்படுத்தி செயற்படுதல் என்பதனை பின்னுக்கு தள்ளியுள்ளது என்பதாகும். இது போன்ற மண முறிவுகளில் ஆணுக்கும், பெண்ணுக்கும் பிள்ளைகளைத் தவிக்கவிடுவதில் ஏதோ ஒரு வகையில் சம பங்களிப்புள்ளதை நாம் காணக் கூடியதாக இருக்கின்றது. தன்னைக் கொலை செய்ய பிரபாகரனால் அனுப்பட்ட பெண் புலி உறுப்பினர்களை மன்னித்து விடுதலை செய்த மனித நேய மிக்க முற்போக்கு சிந்தனை தோழர் நாபா இடம் இருந்தது வரலாறு. ஈழவிடுதலைப் போராட்டத்தில் பெண்களின் முற்போக்கான பாத்திரத்தை அங்கீகரித்தே அவர்களை விடுதலை செய்யச் சொன்னார். ஆமைப்பு வேறுபாடுகளுக்கு அப்பால் வீட்டு அடிமைத்தனம், சமூக அடிமைத்தனம், ஆண்மேலாதிக்கம் போன்ற அடக்கு முறைகளை உடைத்தெறிந்த வண்ணம் போராட புறப்பட்ட பெண்கள் வரிசையில் இப் புலிப் பெண் உறுப்பினர்களைப் தான் பார்ப்பதாகவும்,  இப் பெண்கள் தம் முன்னே உள்ள தடைகளை உடைத்தெறிந்து போராடப் புறப்பட்ட முற்போக்குத் தன்மைக்காக விடுதலை செய்த பத்மநாபாவின் பெண்கள் விடுதலை சம்மந்தமான கண்ணோட்டத்தை இவ் மகளிர் தினத்தில் சீர்தூக்கிப் பார்தல் அவசியமாகின்றது. நான் இன்று உயிர் வாழ்தலுக்கான முக்கிய காரணமாக இருந்த ஒரு கால் வழங்காத நிலையில் உள்ள அம்மாவையும் இவ் சர்வதேச மகளிர் தினத்தில் சீர்தூக்கிப் பார்கின்றேன். எம் சமூகத்தில் இலை மறை காயாய் ஒளிந்திருக்கும் இப் போர்குணம் மிக்க அம்மாக்கள் ஈழவிடுதலைப் போராட்டத்தில் கிராமங்கள் தோறும் இலை மறைகாயாய் இருந்திருகின்றனர், இன்னும் இருக்கினறனர். செம்மண் பிரதேசமாம் சிறுப்பிட்டி உரும்பிராய் பகுதியில் போராளிகளுக்கு வறுமையிலும் உணவ+ட்டி பாதுகாத்த தேவி அக்காவையும், தோழர் நக்கீரனின் வாழ்வுத் துணையையும் நாம் மறக்க முடியுமா?. மண் திண்ணையிலும் இரவு பகல் பராமல் எம்மை பராமரித் தோழர் திலக்கின் சகோதரிகள், தயார் போன்றோரும் மிக மகத்தான பங்களிப்பை ஈழவிடுதலைப் பேராட்டத்தில் செய்தே இருக்கின்றனர். மருதமுனைக் கிராமத்தில் விசேட அதிரடிப்படையினரிடம் இருந்து போராளிகளைக் காப்பாற்றிய அந்த முஸ்லீம் சகோதரி எந்த ‘சமூகக் கட்டுப்பாடுகளை’யும் உடைத்து போராளிகளை தனது வாழ்கைத் துணைவர் என படுகை அறையில் வைத்துக் காப்பாற்றிய வீரவரலாற்றை கொண்டதல்லவா எமது ஈழப் பெண்களின் வரலாறு. மேற் கூறிய வரலாறுகள் எமது மண்ணில் கிராமம் தேர்றும் நிகழ்ந்தன என்பது பதிவு செய்யப்பட வேண்டிய விடயம். இன்றைய சர்வ தேச மகளிர் தினத்தில் இவ் எம் குலத்து தாய்களுக்கு, சகோதரிகளுக்கு சிரம் தாழ்த்தி வணங்குவதில் நாம் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம் சிவரமணி, செல்வி, தயாவர்சினி, போன்ற கவிஞர்களின் காத்திரமான பங்களிப்புகளும், ராஜினி திரணகம போன்ற சமூகவியலாளர்களின் பங்களிப்பும் இன்று புலிகளினால் மண்ணோடு புதைக்கபபட்டுள்ளன. இவை தவிர்க்கப்பட்டிருப்பின் பெண்களின் விளிப்புணர்வு ஈழத்தில் மேலும் மெருகூட்டப்பட்டிருக்கும். நான் பல்கலைக் கழகத்தில் படித்த காலத்து முற்போக்கு கவிதையாயினி சாவச்சேரி இரததி;னபூபதியின் கவிதைகளும், சமூக பெண் ஒடுக்குமுறைக்கான போராட்ட வரைவுகளும், ஈழவிடுதலைப் போராட்டத்தில் நிலவிய அராஜகப் போக்கினால், அவர் பிறந்த சமூகப் பின்னணியினாலும் வெளியே எழும்பி வரமுடியாமல் முடக்கப்பட்டதும் சோக வரலாறு தானே. யாழ்பாணப் பல்கலைக் கழகத்தில் சுதந்தரப் பறவை என்று புலிகளால் அமைக்கபட்ட பெண்கள் அமைப்பு புலிகளின் தேவைகளை, உளவுகளை பார்பதற்கு மட்டும் பாவிக்கப்பட்டு இன்று மண்ணோடு மண்ணாய் போய்விட்டது. இதில் ஆரம்ப காலத்தில் வேலை செய்த போர்குணம் மிக்க புனிதா, சாந்தி போன்றவர்களின் குரல் வளைகள் நசுக்கப்பட்டு இன்று ஏதொ ஒரு மூலையில் ஒடுங்கியதும் உண்மைதானே. பிரபாகரன் மதிவதனியை கடத்தி பி;ன்பு நிர்பந்த விருப்பு மணம் செய்ததும் ஒரு வகை பெண் ஒடுக்கு முறையின் உச்சக்கட்டம்தான். தவிர்க்க முடியாத சூழலில் பிரபாகரனின் விருப்பை ஏற்று தன சுயவிருப்பைத் தவிர்த்து பிரபாகரனுடன் வாழ முற்பட்டது எந்தவகையிலும் ஆண் மேலாதிகத்தில் இருந்து பிரித்து பார்க்க முடியாது ஆகும். மதிவதனியின் ஆத்மாவிற்கு மட்டும் தெரிந்த இந்த உண்மை ஆய்வாளர்களால் எதிர்வு கூறப்பட்ட ஒன்றும் ஆகும். மறுமணம் என்று வரும் போது ஆணின் விருப்புகள், உணர்வுகளுக்கு அளிக்கும் முக்கியத்துவம், தேவை பெண்களுக்கு ஒரு வீதமேனும் கொடுப்பதில்லை என்ற கொடுமையான நிலமையே ஈழத்து பெண்களிடத்து இன்றும் இருக்கினறது. இதில் பாரிய மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். சமூகம் இதில் பெரும் தடைகற்களை கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கம் என்ற வரையறைகளைப் பெண்களுக்கு மட்டும் போட்டு பெண்களுக்கு தண்டனை வழங்குகின்றது என்றே கூறவேண்டும். ஆண்கள் மறுமணம் செய்யும் போது பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ள ஒரு அம்மா தேவை என்று சொல்லும் காரணத்தை பெண்களின் மறுமணத்திலும் இணைத்துப்பார்கத் தயாரா? என்றால், இல்லை என்பதே பொதுவான பதில். இது ஆணாதிக்க செயற்பாட்டின் ஒரு வடிவம்தானே. இதற்கு பலரும் கூறும் வசதியான காரணம் அப்பா இல்லாமல் பிள்ளைகளை வளர்கலாம், ஆனால் அம்மா இல்லாமல் வளர்க்க முடியாது என்பதே. இதில் பெண்ணின் வலிமை, இயலுமை ஏற்றுக் கொள்ளும் விடயங்கள் தொனிப் பொருளாக இருந்தாலும் பொதுமை என்று வரும் போது பெண்கள் ஆணில் தங்கியிருப்பவள் என்ற எல்லைக்குள் முடக்கி தமது ஆணாதிக்க செயற்பாட்டை நிலைநாட்டும் முரண்பாட்டையே நடைமுறையில் நாம் காண்கின்றோம். மலையகப் பெண்களின் தினக் கூலி வாழ்வும் அதனைத் தொடர்ந்த மாலை நேர குடும்ப வேலைச் சுமைகளும் மீளமுடியாத துன்ப வாழ்விற்குள் மலையகப் பெண்களைத் தள்ளியுள்ளது. பெண்களுக்கு மாதத்தில் வரும் உபாதை நாட்கள், குழந்தைகளை வயிற்றில் சுமக்கும் கடினமான கால கட்டங்;கள், கழந்தையைப் பெற்றெடுத்த பின்னான ஓய்வு அதவையான நாட்கள் போன்றவற்றை இவர்களுக்கு இருக்கும் பொருளாதாரச் சுமை வேலைக்குச் செல்லாமல் ஓய்வெடுத்தலை தவிர்க்க வைக்கின்றது. இதில் மலையகப் பெண்களுக்கு விடுதலை வேண்டும். இதற்கான போராட்டத்தை முன்னெடுப்போம் என்ற இச்சர்வ தேச மகளிர் தினத்தில் உறுதி எடுப்போம். இலங்கையில் ஏற்பட்ட போர் நிலமைகளினால் விதவைகள் ஆக்கப்பட்ட பெண்கள்.. இலங்கையில் ஏற்பட்ட போர் நிலமைகளினால் விதவைகள் ஆக்கப்பட்ட பெண்களின் எதிர்கால வாழ்வு ஆணாதிக்கமற்ற சமூகப் பிரஞ்ஞையுடன் அணுகி தீர்க்கப்பட வேண்டிய முக்கியமான ஒன்றாகும். போரினால் கணவனை, அன்புக்குரியவனை, மகனை, தந்தையை ஏன் குடும்ப உறுப்பினர் அனைவரையும் இழந்து தவிக்கும் பெண்களின் மறுவாழ்வு என்பது இன்றய பிரதான விடங்களில் ஒன்றாக அமைகின்றது. இதில் குறிப்பாக இளைஞர்கள் மறுவாழ்வு அளித்தல் என்பதில் அர்பணிப்புடன் செயற்பட்டு தவித்து, தனித்து நிற்கும் எம்மின சகோதரிகளின் வாழ்வில் இணைந்து, இயைந்து ஒரு நம்பிக்கையான வாழ்வுத் தடத்தில் அவர்கள் பயணிக்க வாழ்வை இழந்த பெண்களுக்கு உறுதுணையான வாழ்க்கைத் துணைகளாக தம்மை ஆக்கும் முற்போக்குச் சிந்தனை வட்டத்திற்குள் தம்மை இணைத்துக் கொள்ள வேண்டும். இதனைவிடுத்து மீண்டும் பழைய ஆணடிமைச் சமுதாயச் சிந்தனையில் செயற்படுதல் ஏற்புடையதல்ல.  இந்த சர்வதேச மகளிர் தினத்தில் ஈழப் போராட்டத்தில் வாழ்வை ஏதொ ஒருவகையில் பறிகொடுத்த பெண்களின் மறுவாழ்விற்காக நாம் இணைந்து செயற்படுவொம் என்று சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்வோம். (சாகரன்) (பங்குனி 08, 2010)  Read More »

சர்வதேச மகளிர் தினம் இன்று.. ஈழவிடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு..!!! (சாகரன்)

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும்.. (பாகம் 45) -சித்திறெஜினா


Warning: strpos() [function.strpos]: Offset not contained in string in /usr/www/users/webone/wp-content/themes/options/app/loop-functions.php on line 69

“ஈழம்”.. எத்தனை மனோரம்மியமான வார்த்தை அது!… அந்த ஈழம் என்ற மூன்றெழுத்து உயிரெழுத்தில் தொடங்கி இடையினத்தைத் தொட்டு முடிவில் மெல்லினத்தில் நிறைவடையும் அதன் தனித்துவமே தனிதான். அந்த வார்த்தையில் தமிழ் மொழியில் மிகவும் அரிதான உபயோகத்தில் இருப்பதும் வேறு எந்த மொழிகளிலுமே இல்லாத உச்சரிப்புமுமாகிய “ழ” எழுத்தை உச்சரிக்கும்போது நாக்கு உள் வளைந்து அண்ணத்தை தொட்டு அழகான சுருதியை உருவாக்கி அந்த வார்த்தைக்கு மேலும் மெருகூட்டுகிறது…. ஆனால் ஈழம் என்ற அந்த வார்த்தையை தமிழரசுக் கட்சியினர் தங்கள் சுயலாப அரசியல் நோக்கத்திற்காக தமிழீழமாக உருவெடுக்க வைத்து அதன் செயல்பாடுளில் அமிர்தலிங்கம் போன்றோரால் பயங்கரவாதத்திற்கு வித்திடப்பட்டு பின்னர் அந்த வார்த்தை பிரபாகரனாதியோரால் தங்கள் சுய லாபத்திற்காகப் பறித்தெடுக்கப் பட்டு வழர்த்து உருவேற்றப்பட்டு பயங்கரவாதம் வீறுகொண்டு வெறிநடை போட்டபோதுதான் அந்தத் தமிழீழம் என்ற வார்த்தை கருநாகத்தின் விஷத்தைவிட கொடிய விஷம் பொருந்தியது என்பதை பலரும் உணரத் தொடங்கினார்கள் … தெற்காசிய நாடாகிய நமது இலங்கைத் தீவின் மறு பெயர்களில் ஒன்றான “ஈழம்” என்ற பெயர் இலங்கையின் பல்லின மக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகத்தான் அன்றொரு காலத்தில் இருந்து வந்தது….. 1961 முதல் 1984 ம் ஆண்டு நடுப் பகுதி வரை சுமார் இருபத்தி மூன்று ஆண்டுகள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினரால் தினமும் காலை 7 மணி முதல் 7.30 வரை “ஈழத்துப் பாடல்கள்” என்ற தலைப்பில் இலங்கைக் கலைஞர்களை கௌரவிக்கும் முகமாக இலங்கைத் தமிழ் கலைஞர்களால் எழுதப்பட்டு இசையமைக்கப்பட்டு பாடப்பட்டு வந்த பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு வந்தன. பின்னர் துரதிஸ்டவசமாக “தமிழ் ஈழப் போராட்டம்” என்று ஒன்று ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஈழம் என்ற வார்த்தை வன்முறையை தூண்டும் சொல்லாகக் கருதப்பட்டு அந்த வார்த்தை நீக்கப்பட்டு அந்த நிகழ்ச்சிக்கு “இலங்கைப் பாடல்கள்” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது இங்கே குறிப்பிடத்தக்கது… ஈழம் என்று தமிழர்கள் இலங்கைத் தீவை அழைத்த காலகட்டத்தில் இந்த “ஈழம்” என்ற வார்த்தைக்கு சிங்கள மக்கள் எவருமே எதிர்ப்புத் தெரிவித்ததில்லை…காரணம்.. தமிழ் மொழியில் இலங்கையின் மற்றொரு பெயர் “ஈழம்” என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனால் இன்றோ “ஈழம்” என்ற வார்த்தையைக் கேட்டால் சிங்கள மக்கள் மட்டுமல்ல ஒட்டு மொத்த இலங்கை வாழ் மக்களுமே அஞ்சி நடுநடுங்கி வாழ்க்கையே வெறுத்து போகும்படிக்கு அந்த வார்த்தைக்கு புலிகள் புதிய வரைவிலக்கணம் வரைந்து வைத்து விட்டுப் போய் விட்டார்கள்… ஈழம் என்றால் அது தமிழீழம் என்றும் அது இரக்கமில்லாத இரத்தப் பிரியர்களின் இல்லிடம் என்றும் அது பணத்தாசை பிடித்த புலித் தலைவர்களின் புகலிடம் என்றும் அது புலிப் பினாமிகளுக்கு படியளக்கும் பரலோகம் என்றும் ஆனால் அங்கு வாழும் அப்பாவிச் சனங்களுக்கோ அது அடிமைச் சாசனம் எழுதப்பட்ட கொத்தடிமைக் கூடம் என்றும் அவர்கள் பிள்ளைச் செல்வங்களுக்கோ பலிபீடம் என்றும் அத்துடன் புலிகளை எதிர்ப்பவர்களுக்கும் புலிகளுக்கு மாறான கருத்துக் கொண்டவர்களுக்கும் சிறைச்சாலையாக சித்திரவதைக் கூடமாக தூக்கு மேடையாக இருக்கும் யமலோக இராச்சியம் என்றுதான் இப்போது பலரின் மனத் திரைகளிலும் ஈழத்தின் காட்சிகள் விரிகின்றன…. சிங்கள மொழியில் “சிறீ லங்கா” என்றும் தமிழ் மொழியில் “இலங்கை” என்றும் அழைக்கப்படும் இந்த அழகான தீவை இயற்கை அன்னை வானத்துப் பறவைகளின் வசந்த புரியாக வானம்பாடிகளின் இசைக் கூடமாக தோகை மயில்களின் நடன மேடையாக வடிவமைத்ததுடன் நின்று விடாது விளை நிலங்களையும் தாவரங்களையும் தானியங்களையும் கனி மரங்களையும் கூடவே முத்தையும் மாணிக்கத்தையும் இரத்தினத்தையும் கொட்டிக் கொடுத்து மேலும் கடல் வளத்தையும் நதி வளங்களையும் அலங்கரித்து பூலோகத்து அழகையெல்லாம் இங்கே கூடிவரச் செய்து அதன்மேல் மென் தென்றலையும் தவழ விட்டாள் அவள். ஆனால் இவையனைத்தையும் இங்கே அனுபவித்து வாழ அவளால் படைக்கப்பட்ட மனிதர்களோ தன்னலவாத அரசியல்வாதிகளின் இனவாத மகுடியில் மயங்கி தன்னிலை இழந்து சமூக ஒற்றுமையை குலைத்து விரோதத்தையும் குரோதத்தையும் வழர்க்கும் இனவாத வெறியில் கனன்று இந்தத் தீவை நாசப்படுத்தியது மன்னிக்க முடியாத குற்றமாகும்… இலங்கை என்ற வார்த்தைக்குப் பதிலாக என்றோ எங்கோ ஒரு சில சந்தர்ப்பங்களில் மட்டுமே உபயோக்கிக்கப்பட்டு வந்த “ஈழம்” என்ற வார்த்தை தமிழர்களின் அரசியலில் தமிழீழமாக முதன்மைப் படுத்தப்பட்டு எப்போது செயல்படத் தொடங்கியதோ அப்போது முதல் ஆரம்பமானதுதான் இந்தப் பேரழிவுகள். அதுவரையும் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் இனப் பகையின் அடிப்படையில் பலியாகி வந்த இலங்கை மக்களின் தொகை பல்லாயிரக்கணக்கில் அதிகரிக்கத் தொடங்கியது இந்த வார்த்தையின் செயல்பாடுகளின் பின்னர்தான் என்பது எவருமே மறுக்க முடியாத உண்மையாகும். பலரின் வீட்டை இழக்க வைத்து உற்றார் உறவினர் பெற்றோர் அவர் பிள்ளைகள் என்று இறக்க வைத்து புலம் பெயர்ந்த பல தமிழர்களின் சிந்தனைகளை சிதற வைத்து அவர்களை “ஈழம்” என்ற வார்த்தையில் பைத்தியம் கொண்டு அலைய வைத்த இந்த இரக்கமற்ற “தமிழீழம்” என்ற சாத்தானின் வார்த்தையின் மூலகப் பொருளான ஈழம் என்ற வார்த்தை எப்படி உருவானது? இதன் ஆதி மூலம் என்ன? ஈழம் என்ற வார்த்தைக்கு 1926 ல் உருவாக்கப்பட்ட சென்னை தமிழ் அகராதியில் “கள்ளு” அல்லது “தங்கம்” என்று விளக்கமளிக்கப் பட்டுள்ளது. இலங்கையில் தங்கம் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் எந்த வகையிலும் இல்லாதபடியால் “தங்கம்” என்ற வார்த்தை இலங்கைக்கு பொருத்தமானதாக இருக்கமுடியாது என்று பெரும்பாலான ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.. “ஈழம்” என்ற வார்த்தை கல் வெட்டுகளிலும் சங்ககால இலக்கியங்களிலும் காணப்படுவது உண்மைதான். மதுரை திருப்பரங்குன்றத்திற்கு அருகே தொல் பொருள் ஆராய்ச்சி நடத்தப்பட்டபோது அங்கே காணப்பட்ட முதலாம் நூற்றாண்டு கல்வெட்டொன்றில் “இருக்கத்தூர் ஈழகுடும்பிகன் போலலையான்” என்று ஒரு வசனம் காணப்பட்டது. இந்த வசனம் “தமிழ் பிரேமி” என்ற புராதன தமிழ் எழுத்திலேயே எழுதப்பட்டிருந்தது. (தமிழ் எழுத்துக்களுக்கு ஆதி மூலமான பிரேமி எழுத்துகள் கோணல் மாணலான உருவ அமைப்பைக் கொண்டவையாக இருந்ததாகவும் பின்னர் ஓலைச் சுவடிகளில் எழுதுவதற்கு வசதியாக இவைகள் உருண்டை வடிவில் வடிவமைக்கப்பட்டது என்றும் மேலும் இந்த எழுத்துக்களை இலங்கை உட்பட தமிழ் பேசும் தெற்காசிய நாடுகளுக்கு ஜைன மதமும் பௌத்த மதமும் பரப்பச் சென்ற மதத் துறவிகள் அறிமுகம் செய்தார்கள் என்றும் இந்தியாவின் பிரபல தொல்பொருள் ஆய்வாளரும் பிரேமி எழுத்துக்களின் ஆய்வாளருமான திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த ஐராவதம் மகாதேவன் தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இவருக்கு இந்திய அரசு 2009 ற்கான பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளதுடன் இவர் 1987 – 1991 வரை தினமணி பத்திரிகையின் ஆசிரியராகவும் பணி புரிந்து வந்தார் என்பதும் வேறு விடயங்கள்). கல்வெட்டில் காணப்பட்ட இந்த ஈழக்குடும்பிகன் என்பவன் ஈழம் என்று அழைக்கப்படும் இலங்கைத் தீவை சேர்ந்தவனல்ல அவன் தென்னிந்திய சிற்றூரான இருக்கத்தூரைச் சேர்ந்தவனாக இருந்திருக்க வேண்டும் அதனால்தான் அவன் “இருக்கத்தூர் ஈழக்குடும்பிகன்” என்று அழைக்கப்பட்டான் என்று ஈழம் என்ற வார்த்தையை ஆய்வு செய்தவர்களுள் ஒருவரான றோபெர்ட் கால்வெல்ட் என்ற ஆங்கிலேய ஆய்வாளர் கருதுகிறார்… சங்ககால இலக்கியமான பட்டினப்பாலையில் ஈழத்து உணவு என்று ஒரு சில வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல் சங்ககால இலக்கியமான அகநானூறு மற்றும் குறுந்தொகையில் ஈழத்து பூதன் தேவனார் என்னும் பிரபலமான தமிழ்ப் புலவர் ஒருவர் வாழ்ந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது . ஆனால் ஒன்பதாம் நூற்றாண்டளவில் பல்லவ சோழ சாம்ராஜ்ஜிய காலங்களில் காணப்பட்ட சில கல் வெட்டுகளில் “ஈழம்” என்ற சொல்லுக்கு “கள்ளு” (சீலம்) என்றும் தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள்ளை உற்பத்தி செய்து வியாபாரம் செய்து வருபவர்களை “ஈழவர்” என்றும் அவர்கள் வாழும் பகுதிக்கு “ஈழவர் சேரி” என்றும் அவர்கள் தொழில் முறைக்கு விதிக்கப்பட்ட வரிக்கு ” ஈழப் பூச்சி” என்றும் பிரேமி எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த சொற்கள் காணப்பட்டன…. இந்த ஈழவர் என்ற சமூகத்தினர் இன்று தமிழ் நாட்டில் குறைந்த அளவே காணப்பட்ட போதிலும் கேரள மானிலத்தின் தென் பகுதியில் மிகவும் செறிந்து வாழ்கிறார்கள். இவர்களில் பலர் கேரளாவிலிருந்து சுமார் முன்னூறு நானூறு வருடங்களுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் இலங்கைக்கு இடம் பெயர்ந்து சென்று இலங்கையின் வட பகுதியில் வாழ்ந்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாக சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணத்தின் உட்புறக் கிராமங்களில் மட்டுமே உபயோகத்தில் உள்ள தமிழுடன் கலந்த சில மலையாளச் சொற்கள் இதற்கு சான்று பகிர்கிறது. என்னுடைய மகன் அல்லது என்னுடைய மகள் என்பதற்கு “என்ர மோன்” “என்ர மோள்” என்பது இன்றுவரை மலையாள மொழியில் வழக்கிலுள்ள சொற்களாகும். அதேபோல “அங்கே பார்” என்பதற்கு “பங்க பார்” என்பதும் “அங்கே போ “என்பதற்கு “புங்க போ” என்பதும் வழக்கொழிந்த மலையாளச் சொற்களாகும்… கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் இந்திய சோழச் சக்கரவர்த்திகளின் ஆட்சிக் காலத்தின்போது இந்த ஈழவர் என்னும் சமுதாயம் வாழ்ந்த கிராமங்கள் “ஈழச் சேரி” என்று அழைக்கப்பட்டதாக ஈழம் பற்றி ஆய்வுகள் நடத்திய பிரபல மொழி ஆய்வாளாரான பீட்டர் சால்க் என்ற ஆங்கிலேயர் தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அவர் குறிப்பிடுகையில் வேலூர்பாளயத்தில் கண்டெடுக்கப்பட்ட பல்லவ மன்னனான நந்திவர்மன் (கி.பி.846 – 869) காலத்துக் கல்வெட்டுப் பலகைகளில் ஈழவர்கள் பூலோகத்து தேவலோக விருட்சங்களுடன் சம்பந்தப்பட்டு தொழில் முறைகள் செய்வதால் இவர்கள் தேவ தர்மத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் ஆகவே இவர்கள் போற்றப்படவும் கௌரவிக்கப்படவும் வேண்டியவர்கள் என்று தமிழிலும் சம்ஸ்கிருத மொழியிலும் எழுதப்பட்டிருந்ததாகவும் மேலும் குறிப்பிட்டிருக்கிறார்… சேரி என்ற வார்த்தை நமது காலத்தில் சமுதாயத்தில் மிகவும் பின் தங்கிய மக்கள் வாழும் பகுதியாக எண்ணப்படுகிறது ஆனால் முற்காலங்களில் வேறுபட்ட சமுதாயங்கள் வாழ்ந்த பகுதிகள் அவரவர் சமூகப் பெயர்களுடன் சேர்த்து சேரிகளாகவே அழைக்கப்பட்டன. மேலும் அவர்களுடைய இயற் பெயர்களும் அந்தந்த சேரிகள் தொடர்பாகவே அறியப்பட்டன. உதாரணமாக இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருவள்ளுவர் சென்னைப் பட்டினத்திற்கு தெற்கேயுள்ள மயிலாப்பூரிலே பிறந்திருந்தாலும் அவர் உறையூரிலுள்ள “வள்ளுவ” சேரியிலே வழந்தமையால் “திருவள்ளுவர்” என்று பெயர் பெற்றார் என்று அவரது வாழ்க்கைச் சரிதம் கூறுகிறது… அதேபோன்றுதான் சங்ககால இலக்கியங்கியங்களில் இடம்பெறும் ஈழத்துப் பூதந்தேவனாரும் ஈழச்சேரியை சேர்ந்தவராக இருந்திருக்க வேண்டும் ஏனெனின் அந்த இலக்கியங்கள் எதிலுமே ஈழம் என்பது இலங்கையென்றோ அல்லது அது ஒரு தீவு என்றோ எந்தவிதமான குறிப்புகளும் காணப்படவில்லை. மேலும் ஈழம் என்ற வார்த்தை வேறு எந்த யாழ்ப்பாணச் சரித்திர நிகழ்ச்சிகளிலும் பதியப்பட்டவில்லை. 18ம் நூற்றாண்டில் வாழ்ந்து யாழ்ப்பாணச் சரித்திரத்தை “யாழ்ப்பாண வைபவமாலை” என்னும் செய்யுள் வடிவில் எழுதிய மயில்வாகனப் புலவர் தனது செய்யுளில் எந்தவொருவிடத்திலும் ஈழம் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. (யாழ்ப்பாணத்தை அரசாண்ட மன்னர்கள் எவருமே இலங்கைத் தமிழர்களாக அல்லாமல் அவர்கள் அனைவரும் இந்திய வம்சா வழியினராக இருந்தபடியால் இந்த மன்னர்கள் அனைவரையுமே புலவர் “ஆரியச் சக்கரவத்திகள்” என்றுதான் தனது செய்யுள்களில் குறிப்பிட்டிருக்கிறார் என்பது வேறு விசயம்). கிறிஸ்துவுக்குப் பின் பனிரெண்டாம் நூற்றாண்டில் சமஸ்கிருத்தத்தில் எழுதப்பட்டிருந்த வால்மீகியின் இராமாயணத்தை தழுவி கம்ப இராமாயணமாக தமிழில் எழுதிய கம்பர்கூட இராமனின் வருகையால் இராவணனுக்கு ஏற்பட்ட மனக் கலக்கத்தை குறிப்பிடும்போது… “கடன் கொண்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்”… என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார். ஆகவே சங்ககாலம் முதல் நவீன காலம்வரை பெரும்பாலும் இலங்கை என்ற சொற்பதமே அனைவராலும் அறியப்பட்டு வழக்கிலுள்ள பெயராக நமது நாட்டுக்கு இருந்து வந்துள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகிறது… ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திரப் போராட்டம் சூடு பிடித்திருந்த காலகட்டத்தில் பாரதியாரால் இயற்றப்பட்ட பாடல் ஒன்றில் “சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்” என்ற வரிகளுக்கு எதிராக அந்த நாட்களில் எந்த இலங்கைத் தமிழனாவது போர்க் கொடி உயர்த்தவில்லை.. காரணம்.. இலங்கைக்கு “சிங்களம்” என்றொரு பெயரும் புராதன காலத்தில் வழங்கப்பட்டு வந்தது. இந்தப் பெயரை அடிப்படையாக வைத்தே பாரதியார் தன் கவிதையில் “சிங்களத் தீவு” என்று குறிப்பிட்டார். (இதையேதான் ஈழம் என்ற பெயர் இலங்கைத் தீவைக் குறிக்கும் பாளிமொழிச் சொல்லான ‘சிஹலம்’ என்பதிலிருந்து திரிந்தது என பிரபல தமிழிலக்கிய ஆராய்ச்சியாளர் கிருஷ்ணசாமி ஐயங்கார் கருதினார்). அன்றைய கால கட்டத்தில் சிங்கள தமிழ் மக்களிடையே ஒரு சகோதர உணர்வு மேலிட்டிருந்ததால் இனபேதம் அவர்கள் நெஞ்சிலே வித்திடாதிருந்தது ஆகவே இலங்கையில் வாழ்ந்த தமிழர்களுக்கு பாரதியார் அப்படி “சிங்களத் தீவு” என்று தன் கவிதையில் குறிப்பிட்டிருந்தது ஒரு பொருட்டாக தெரியவில்லை. அது தமது சகோதரனுக்கு கிடைத்த பெருமையாகக் கூட அவர்கள் கருதி அதில் உவகை அடைந்திருக்கலாம். மேலும் பாரதிகூட அது இலங்கைத் தமிழர்களின் உணர்வுகளை பாதிக்காது என்பதையும் நன்கு அறிந்துதான் அந்த வரிகளை அவர் எழுதியிருக்க வேண்டும்..ஏன்?.. அவருக்குக்குகூட தமிழரையும் சிங்களவரையும் பிரித்துப் பார்க்கும் சந்தர்ப்பங்களை இலங்கை வாழ் சிங்கள தமிழ் மக்கள் வழங்கவில்லை என்பதுதான் ஒரே காரணமாக இருந்திருக்க வேண்டும்…. அப்படி ஈரினமும் ஓரினமாய் ஒன்றிணைந்து அன்னியனின் ஆட்சிக்கெதிராக திரண்டெழுந்து வென்றெடுத்த சுதந்திரத்தை கேடுகெட்ட இனவாத அரசியல்வாதிகள் அனுபவிக்க விடாமல் அவர்களுக்கிடையில் பகையை மூட்டி அவர்களை விரோதிகளாக்கி பிரித்து வைத்து விட்டு மறைந்து போனார்கள் . அவர்கள் மறைவிற்குப் பின் இன்று மீண்டும் அந்த ஒற்றுமை துளிர்விடத் தொடங்கியிருக்கிறது. இலங்கையின் ஜனாதிபதிகூட தனது மேடைப் பிரசங்கங்களில் தமிழில் பேசும்போது நமது நாட்டைக் குறிப்பிடும் இடங்களில் “சிறீலங்கா” என்று குறிப்பிடாமல் “இலங்கை” என்றே குறிப்பிடுவதும் அதற்கு எதிராக எந்த சிங்கள மகனும் குரலெழுப்பாததும் அவர்களின் மன மாற்றங்களின் பிரதிபலிப்பேயாகும். “இலங்கையை” தங்கள் இல்லிடமாக சிங்கள மக்கள் கருதும்போது “சிறீ லங்காவை” தமிழர்கள் தங்கள் இல்லிடமாக கருதும் காலம் வெகு தூரத்தில் இல்லை… ஆகவே பழைய தமிழர் விடுதலை கூட்டணியிரோ அல்லது பின்னர் வந்த புலிகளோ அல்லது அவர்களின் மறைவிற்குப் பின் கூக்குரலிடும் புலிப் பினாமிகள் கூட்டமோ குறிபிடும் “ஈழம்” என்ற வார்த்தை தமிழர்களுக்கு பொருதமானதல்ல. ஏனெனில் அது தமிழர்களின் வாழ்வில் இதுவரை காலமும் மனித அழிவைத் தவிர வேறு எதையுமே கொண்டு வந்ததில்லை. ஆகவே தன் நாட்டையும் அதன் மக்களையும் அதன் இன ஒருமைப்பாட்டையும் நேசிப்பவன் இலங்கை என்ற வார்த்தையால்தான் தன் நாட்டைஅழைக்க விரும்புவானே தவிர ஈழம் என்ற வார்த்தையினால் அல்ல! மீண்டும் நமது நாட்டில் ஒற்றுமையும் சமாதானமும் நிலவ வேண்டும். அனைவரின் மனங்களிலும் மகிழ்சி கான மயிலைப்போல் தோகை விரித்தாட வேண்டும். நமது இலங்கைத் தாய் பெற்றெடுத்த அவள் அன்புச் செல்வங்கள் அனைவரும் மரண பயமின்றி அவள் மடியில் நீடுழி நெடுங்காலம் வாழ வேண்டும்…இதுதான் சமாதானத்தை நேசிக்கும் ஒரு மனிதனின் உள்ளத்தில் தினம் தோன்றும் நினைவுகள் அவன் தூக்கத்திலும் வரும் கனவுகள்….(தொடரும்) அன்புடன் சித்திறெஜினா  Read More »

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும்.. (பாகம் 45) -சித்திறெஜினா

ஒரு புறம் சிவாஜி.. மறுபுறம் பத்மினி… யாருக்கு ஒத்து இசைப்பது என்ற குழப்பத்தில் விஸ்வநாதன் -சாகரன் (கட்டுரை)


Warning: strpos() [function.strpos]: Offset not contained in string in /usr/www/users/webone/wp-content/themes/options/app/loop-functions.php on line 69

இலங்கைத் தேர்தல் களம் துப்பாக்கி சூடற்ற ‘சூடு’ பிடித்துள்ளது. புலிகளினால் ‘கட்டி’ வைக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நான்கு பிரதான பிரிவுகளாக பிளவுபட்டு நிற்கின்றது. தமிழ் அரசுக் கட்சி என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு (சம்மந்தர் குழு), அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு (கஜேந்திரன் குழு), தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பு என்ற தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு (சிவாஜிலிங்கம் குழு), பொதுஜன ஐக்கிய முன்னணி(ஆதரவு) என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு (கிஷோர் குழு) என்பன அவையாகும். இன்னும் சிலர் பென்சனுடன் ஓய்வுபெற்று, ஒதுங்கியும் விட்டனர். வெளிநாடுகளில் வாழும் விஸ்வநாதனுக்கு தற்போது ஒரே குழப்பம். யாருடன் தான் தற்போது ஒத்து இசைப்பது என்று. டாலர்களை அனுப்பி அரசை எப்போதும் எதிர்த்துக் கொண்டு இருக்கச் சொல்வது. பாராளுமன்றத் தேர்தலில் யார் வெல்லப் போகின்றார்கள். இவர்களை வைத்து அரசியல் தீர்வை எட்டவிடாமல் எவ்வாறு தொடர்ந்தும் குழப்பம் விளைவிக்கலாம். இதன் மூலம் அவர் தான் வாழும் நாட்டின் விரும்பங்களை பூர்த்தி செய்ய முடியும். சரத் பொன்சேகாவால் முடியாமல் போனதை விசுவநாதன் மூலம் நடத்தி முடிக்க முயல்கின்றது மேற்குலகம். குழப்பங்கள் விளைவிக்கும் சிறந்த குழுவிற்கே டாலர் அனுப்ப வேண்டும் என்பதே விசுவநாதனின் விருப்பம். ஆனால் அது எந்தக் குழு என்ற இனம் காண்பதில் அவர் ரொம்பத்தான் குழம்பிப் போய் உள்ளார். ஒன்றா? இரண்டா? மொத்தம் நான்கு குழுக்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் குழப்பங்கள் விளைவிப்பதில் மகா நிபுணர்கள் என்பதை கடந்த காலங்களில் தமது செயற்பாடுகள் மூலம் நிரூபித்தவர்கள். அரசியல் தீர்வு ஏற்படாமல் குழப்பங்கள் தொடர்ந்தால்தானே தொடர்ந்தும் தமது உண்டியல் வேலைகளை வெளிநாடுகளில் செய்ய முடியும். நாடு செல்லும் எண்ணம் அற்ற இவர் நாடு செல்ல விரும்பும் புலம்பெயர் தமிழ் மக்களை பலிக்கடாவாக்க முடியும். இவற்றிற்கு மேலாக நீண்டகால நண்பன் ரணில் விக்கிரமசிங்க வேறு மண்ணெண்ணை மகேஸ்வரனின் துணைவி சகிதம் யாழிலும் ஏனைய தமிழ் பிரதேசங்களிலும் ஒருபுறம் போட்டியிடுகின்றனர். ரணில் – பிரபா உடன்படிக்கை மூலம் எஞ்சியிருந்த ஜனநாயக, முற்போக்கு, மாற்று அரசியல் அமைப்பு தலைவர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்களை கொன்ற குவிக்க அரசியல் அலுவலகம் அமைத்து பிஸ்டலுடன் காரியம் செய்ய கண்காணிப்பு குழுக்களை நோர்வே அனுசரணையுடன் அமைத்துக் கொடுத்த ஐக்கிய தேசியக் கட்சி ரணிலை கைவிட முடியுமா? மறுபுறம் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் புலிகளின் தற்காலிக ‘தேசியத் தலைவர்’ ஆக வலம் வந்த பிரபாகரனின் நூல் கோவணத்தை உருவி அவரின் உடலில் (கறுப்பு) பட்டுக் கோவணத்தை கட்டிவிட்ட சரத்பொன்சேகாவும் களத்தில் தமிழ் பிரதேசம் எங்கும் வாக்கு கேட்டு நிற்கின்றார். விசுவநாதன் ‘ஒரு புறம் நாகம் மறுபுறம் வேடன்’ என்று பாட்டுக்கு இசையா அமைக்க முடியும். களத்தில் 4 + 2 பிரிவுகள் புலத்தில் பல பத்துப் பிரிவுகள். தனியொரு விசுவநாதன் என்ன செய்ய முடியும். என்ன பொட்டனா இருக்கின்றான் வெருட்டி காரியத்தை முடிக்க? அல்லது என்ன பிரபாகரனா இருக்கின்றான்? கொன்று விட்டு மாத்தையாவின் மனைவிக்கு வெள்ளைச் சேலை கொடுத்தனுப்பியது போல் செய்ய. எல்லாவற்றையும் தோண்டிப் புதைத்தல்லவா விட்டார்கள் முள்ளிவாய்காலில்.. இவ் கலாட்டாக்களுக்கு வெளியே தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைவதற்கு பேச்சுவார்த்தை நடாத்தி பின்பு இணையாமல் தவிர்த்தும், தள்ளியும் வைக்கப்பட்டு விட்டனர் சிலர். ஏன் இந்த குறுக்கோட்டம். நாற்காலிகளைப் பிடித்து மக்கள் சேவை செய்யத்தான் என்று விளக்கம் கூறுகின்றனர். ‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்று சொல்லி இவர்களில் பலர் ‘தம்மக்கள்’ சேவையே மகேசன் சேவையென தம் மக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியும், தங்கள் குடும்பங்களின் சுகபோகங்களை மட்டும் பெருக்கிக் கொண்டும் காலத்தை தள்ள முற்படுகின்றனர். எமது வரலாறு அப்படியானது. 60 வருடங்களாக நாம் கண்டுவரும் காட்சிகள் அவை. காலத்துக்கு காலம் ‘50 இற்கு 50’இ ‘சமஷ்டி’இ ‘தனிநாடு’இ ‘மாவட்ட சபை’இ‘மாகாண சபை’  ‘தமிழ் தேசியம்’ ‘சுயநிர்ணய உரிமை’ என்று கோஷங்களை போட்டு தமிழ் மக்களை உசுப்பேத்தி ஏமாற்றி நாற்காலிகளைப் பிடித்ததுதான் மிச்சம். உருப்படியாக ஒன்றும் இவர்கள் சாதிக்கவில்லை. சாதிக்க முற்பட்டவர்களையும் இவர்கள் விட்டதில்லை. 1 ½ வருட வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையைத் தவிர. இந்த 60 வருடகாலம் பிற்போக்கு தமிழர் தலைமைகளால் ஒன்றையும் செய்ய முடியவில்லை. மீண்டும் ‘நிரந்தரத் தீர்வு’ ‘சுயநிர்ணய உரிமை’ ‘இந்திய வடிவிலான சமஷ்டி’ ‘மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி’ என்று தேர்தல் களம் இறங்கும் இவர்கள், தமிழ் பேசும் மக்களின் பிரச்சனையை ஒருமித்த கோஷத்தில் உறுதியாகச் சொல்லும் ஒரு புரிந்துணர்வுக்கு வரமுடியாதவர்களாக உள்ளனர். தேர்தலின் பின்பு அமையப் போகும் அரசு தமிழர் தரப்பை அழைத்து அரசியல் தீர்வுபற்றி பேச முற்பட்டால் என்ன அரசியல் தீர்வுத்திட்டத்தை முன்வைத்து பேசுதல் என்பதற்குரிய வரைதல் யாரிடமாவது உண்டா? என்றால் அதுவும் இல்லை. சரி அரசு ஒரு தீர்வை முன்வைத்தால் ஒருவர் ஆதரிக்க, இன்னொருவர் எதிர்க்க, மற்றவர் நிராகரிக்க, அடுத்தவர் வெளியேற போங்கள் ஒரே கலாட்டாவாகத்தான் போகின்றது. ‘தமிழர் அரசியலில் இது சகஜம் அப்பா’ என்று தமிழ் பேசும் மக்களும் தமது அடுத்த தேர்தல் வரை வாளாதிருத்தல் இன்னும் தொடருமாயின் கிழவன் செல்வநாயகத்தின் ‘தெய்வ வாக்கியம்’  ‘தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்பதைத்தான் மீண்டும் துணைக்கு அழைத்தல் வேண்டும். எத்தனை தடவைதான் இப் தெய்வ வாக்கியத்தை நாமும் துணைக்க அழைக்க முடியும். தமிழ் பேசும் மக்களே சற்ற நில்லுங்கள், நிதானியுங்கள், யோசியுங்கள், ஜனாதிபதித் தேர்தலில் என்ன செய்தீர்கள் என்பதை ஆராயுங்கள். அதற்கு முதல் 1948 இல் இருந்து 2005 ம் ஆண்டு தேர்தல்வரை யாருக்கு என்னத்தை நம்பி வாக்கு போட்டீர்கள் என்று சிந்தியுங்கள். என்னத்தைச் சொல்லி அவர்கள் உங்களிடம் வாக்கு கேட்டார்கள்? அதில் ஏதாவதையாவது நிறைவேற்ற உருப்படியாக, ஆக்கபூர்வமாக செயற்பட்டார்களா? சிங்களத் தலைமை விடவில்லை என்று மட்டும் சும்மா கத்திக் கொண்டு இருக்காதீர்கள். கிடைத்த சந்தர்பங்களை தமிழ் தலைமைகள் சரியாக பயன்படுத்தினார்களா? அல்லது சந்தர்பங்களை ஏற்படுத்தும் சாணக்கியத்தை பாவித்தார்களா? சர்வ தேசம் ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்புக்களை சரியாகப் பயன்படுத்தி இலங்கை அரசை அம்பலப்படுத்தினீர்களா? மாறாக தமிழ் மக்கள் எல்லோரும் ‘பயங்கரவாதிகள்’ என்ற முத்திரையை குத்த முயன்று நீங்கள் மட்டும் தோற்றுப் போனீர்கள். ஏன் நிறைய காலம் பின்னோக்கி சென்று பார்பான். நடப்பு பாராளுமன்றக் காலகட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 22 எம்பிகளில் யாராவது ஒருவராவது தமது தொகுதிக்கு போய் இருக்கின்றார்களா?. அல்லது வருடத்திற்கு ஒரு எம்பிக்கு ஒதுக்கிய 1 கோடி ரூபாயில் எதாவது தமது தொகுதிக்காக செலவு செய்தார்களா? ஒரு பொதுசன மலசல கூடத்தை பொது இடங்களிலாவது கட்டினார்களா?.  இலங்கை அரசு வழங்கிய இராஜதந்திர கடவுச்சீட்டில் வெளிநாட்டு உல்லாச சுற்றப் பயணங்களை மட்டும்தான் மேற்கொண்டனர். அங்கு தங்கள் உறவினர்களுடன் களிப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில விமர்சனங்கள் இருந்தாலும் டக்ளஸ் தேவானந்தா என்ற ஒரு அமைச்சர் மாத்திரம் வடக்கில் நின்று தமது மக்களுக்கேனும் அவரால் முடிந்தவற்றை செய்தார். அதுவும் புலிகளின் பலத்த கொலை அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும். கூடவே கிழக்கில் இரா துரைரத்தினம்  தனி ஒருவராக கிழக்கு மாகாண சபையில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும் பல்வேறு பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் மக்களுக்கு சேவை செய்தார், செய்கின்றார். இவ்விடத்தில் பல விமர்சனங்கள் இருந்தாலும் கிழக்கு மாகாண முதல் அமைச்சர் சந்திரகாந்தனையும், அமைச்சர் முரளீதரனையும் நினைவு கூர்வதும் சாலப் பொருத்தமானதே. இவர்களால் முடியும் என்றால்; ஏன் அந்த 22 இனராலும் ஒன்றும் செய்ய முடியாமல் போனது. அவர்களுக்கு மக்களைப்பற்றி அக்கறை இல்லை என்பதே உண்மையான காரணம் ஆகும். தமது பதவி சுகங்களே இவர்களுக்கு முக்கியம்.  இவர்கள் மீண்டும் வாக்கு கேட்டு வருகின்றனர் நாற்காலிப் பதவிகளை பெற்று தங்களுக்காக மட்டும் வாழ்வதற்காக. இவர்களுக்கு ஒத்து இசைக்க புலம்பெயர் நாடுகளில் விசுவநாதன் இசை கோர்த்து கச்சேரிக்கு முஜ்தீபுக்கள் போடுகின்றார். இவர்களும், இவர்களின் மூதாதையரும் மக்களின் வாக்குகளால் தேர்தலில் வெற்றி பெற்றதும் தமது குடும்பம், தமது பிள்ளைகள், தனது நலன் என்று குறுகிய பிழைப்புவாதத்தை மட்டுமே தொடர்ந்தும் செய்தார்கள், செய்து வந்தார்கள். தங்கள் குடும்பங்களையும், உறவுகளையும் பாதுகாப்பாக வெளிநாடுகளில் வைத்துக் கொண்டு துப்பாக்கிப் போராட்டம் நடத்த தூண்டினார்கள். ஏழைக் குழந்தைகளை குண்டுகளை கட்டிக்கொண்டு வெடிக்க வைக்க உசுப்பேத்தி விட்டார்கள். முள்ளிவாய்காலில் மனிதக் கேடயங்களாக அப்பாவி மக்கள் மாட்டிக் கொண்ட போது போரை நிறுத்த புலிகளை வலியுறுத்தினார்களா? அல்லது மக்களை விடுவிக்க புலிகளையும் வற்புறுத்தினார்களா? இல்லவே இல்லையே மாறாக வெளிநாடுகளில் தங்கி சுகங்களை அனுபவித்துக் கொண்டு உசுப்பேத்தலை தொடர்ந்தும் செய்து கொண்டு இருந்தனர். இந்த கோஷ்டிகள் இன்று மீண்டும் பல குழுக்களாக சிதறி உங்களிடம் வாக்கு கேட்டு வருகின்றனர்.  இன்னுமா தமிழ் பேசும் மக்களே உறக்கத்தில் இருக்கின்றீர்கள்! விழித்தெழ மறுக்கின்றீர்கள்.. மிகுதியை உங்களிடம் விட்டு விடுகின்றோம். நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்ன செய்ய வேண்டும் என்று..!!!! (சாகரன்) (பங்குனி 03, 2010)  Read More »

ஒரு புறம் சிவாஜி.. மறுபுறம் பத்மினி... யாருக்கு ஒத்து இசைப்பது என்ற குழப்பத்தில் விஸ்வநாதன் -சாகரன் (கட்டுரை)

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும்.. –சித்திறெஜினா (பாகம் 44)


Warning: strpos() [function.strpos]: Offset not contained in string in /usr/www/users/webone/wp-content/themes/options/app/loop-functions.php on line 69

அன்று அந்தப் பாண்டிய மன்னனின் பிறந்த நாள். குறுநில மன்னர்கள் முதற்கொண்டு புலவர்கள் அறிஞர்கள் என்று பலதரப்பட்டவர்களாலும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது தர்பார் மண்டபம். பாண்டிய மன்னனும் தன் ஆடை அலங்காரங்களுடன் அரச சிம்மாசனத்தில் கம்பீரமாக வந்தமர்ந்தான். பிறந்த நாள் நிகழ்ச்சிகளும் ஆரம்பமாகியது. முதல் நிகழ்ச்சியாக சபையிலே அவன் புகழ் பாடிப் பரிசுகள் பெற வரிசையாக காத்திருந்த பல புலவர்கள் ஒவ்வொருவராக எழுந்து நின்று மன்னனிடம் இல்லாத பல குணாதிசயங்களையும் இட்டுக் கட்டி அவன் புகழாகப் பாடி மன்னனுக்கு ஐஸ் வைத்து பரிசில்கள் பல பெற்று இருக்கையில் அமர்ந்தார்கள். இறுதியாக எழுந்திருந்தார் ஔவை பிராட்டியார். சபையிலிருந்த அத்தனை கண்களும் அவர் எப்படி மன்னைப் புகழ்ந்து கவிபாடப் போகிறார் என்று ஆவலுடன் பார்த்தன. “வரப்புயர” ஜஸ்ட் வன் வேட்… ஒரேயொரு வார்த்தை… வாழ்த்தி விட்டு மௌனமாக இருக்கையில் அமர்ந்தார் அவர். இது என்ன அர்த்தமில்லாத புதுமையான வாழ்த்து என்று ஜால்ரா புலவர்கள் திகைத்து நிற்க தன்னைப் புகழ்ந்து பல வார்த்தைகளுக்கு மெருகூட்டிக் கவிபாடி தன் மகிழ்ச்சிக்கு உருவேற்றுவார் ஔவை என்று எதிர்பார்த்திருந்த மன்னனும் மிகுந்த ஏமாற்றமும் கோபமும் அடைந்தான். “என்ன கூறுகிறீர் ஔவாயாரே நீர் கூறிய வார்த்தையின் அர்த்தத்தை சபையோருக்கு விளக்கமாகக் கூற முடியுமா?” என்று சற்று எரிச்சலுடன் கேட்டான் அவன்….மீண்டும் எழுந்தார் ஔவையார்… வரப்புயர நீருயரும் நீருயர நெல்லுயரும் நெல்லுயரக் குடியுயரும் குடியுரக் கோன் உயருவான்.. என்று அந்த ஒரு வார்த்தைக் கவியை முழுமைப்படுத்தினார் அவர். ஆம்… அந்த நாட்களில் பாண்டிய நாட்டில் வறுமை தலை விரித்து தாணடவாடிக் கொண்டிருந்து… ஆகவேதான் அன்று அந்த ஒரேயொரு வார்த்தையால் மன்னனை வாழ்த்தி நாட்டின் நிலைமையை அவனுக்கு அர்த்த புஸ்டியுடன் சுட்டிக்காட்டி உணர்த்தினார் ஔவை. வறுமையில் வாடும் ஒரு நாட்டின் மன்னன் தானும் தான் பிறந்த நாடும் புகழ்பெற வேண்டுமானால் முதலில் அவன் அந்த நாட்டிலுள்ள வயலின் வரம்புகள் யாவும் உயர்த்தப்படுவதற்கு வழிவகுக்க வேண்டும் அப்படி அங்கே வரம்புகள் உயர்த்தப்பட்டால் வயல்களில் இயற்கையாகவே தேங்கும் நீரின் நிலையும் உயரும் அப்படியே நீருயர்ந்தால் நெல்லுயர்ந்து விளைச்சல் செழித்து அதனால் அந்த நாட்டின் பொருளாதாரம் உயரும். அப்படிப் பொருளாதாரம் உயரும்போது அங்கு வாழும் குடிமக்களின் வாழ்க்கைத் தரமும் உயரும் அப்போதுதான் அவர்கள் மனம் நிறைந்து மனம் மகிழ்ந்து தங்கள் நாட்டின் செழிப்புக்குக் காரணமாக அமைந்த அந்த மன்னனை வாழ்த்துவார்கள் அவன் புகழும் உயரும் என்று அடுக்கடுக்காக தன் கவிக்கு விளக்கமளித்தார் அவர்… அடடா! ஒரு நாடுயர்ந்து அதன் ஆட்சியாளர் போற்றப்பட வேண்டுமானால் அந்த நாட்டின் வழர்ச்சிக்கு தடையாக இருக்கும் அடிப்படைக் காரணம் என்னவென்று முதலில் கண்டறியப்பட்டு அது சீர்திருத்தப்படவேண்டும் அந்தச் சீர்திருத்தம்தான் மேற் கொண்டு அந்த நாட்டின் வழர்ச்சிக்கு அடி கோலுகிறது என்பதை எத்தனை அழகாக நாசூக்காக சுருக்கமாக “வரப்புயர” என்ற ஒரேயொரு வார்த்தையில் அந்த அம்மணி அடக்கி விட்டார் என்பதை எண்ணிப் பார்க்கும்போது அவருடைய சாணக்கியத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.. இன்று ஔவையார் உயிருடன் இருந்து நமது இலங்கைத் தமிழர்களை வாழ்த்தும் சந்தர்ப்பம் ஒன்று அவருக்கு வழங்கப்படுமேயானால் அவர் அன்று அந்த பாண்டிய மன்னனை வாழ்த்தியதுபோல் இன்றும் நமது தமிழர்களை ஒரே வார்த்தையில்தான் வாழ்த்தியிருப்பார். இதுவும் அதுபோல் ஜஸ்ட் வன் வேட்தான்.. ஒரேயொரு வார்த்தை… “மனமுயர”…. ஆம் இன்றைய நமது தமிழர் சமுதாயத்திற்கு முக்கியம் தேவையான அடிப்படைத் தேவை அந்த “மனமுயர” என்ற வார்த்தையில்தான் அடங்கியிருக்கிறது. அந்த வார்த்தையை ஔவையில் பாணியில் விரிவுபடுத்தினால்…. மனமுயர அறிவுயரும் அறிவுயரக் குணமுயரும் குணமுயரப் பகை மறையும் பகை மறைந்தால் வழி திறக்கும் வழி திறந்தால்.. தமிழரின் வாழ்வில் ஒளி பிறக்கும்… என்றுதான் “மனமுயர” என்ற வார்த்தையின் விளக்கம் விரிவடைந்திருக்கும். … அன்று தமிழரசுக் கட்சித் தலைவர்களாலும் பின்னர் பிரபாகரனின் புலி இயக்கத்தினராலும் சுருக்கப்பட்டு அவர்களின் மறைவைத் தொடர்ந்து தற்போது புலிப் பினாமிகளால் மேலும் கேவலமாக சுருக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழர்களின் மனங்களின் எண்ணங்கள் யாவும் மீண்டும் விரிவடைந்து உயர்த்தப்பட வேண்டும். அந்த மனவுயர்ச்சியின் மூலம் அவர்கள் புத்தி தெளிந்து சமாதானப் பாதையை நோக்கித் திருப்ப வேண்டும் அப்படி அவர்கள் மனம் திருந்தாவிட்டால் தமிழ் இனம் கடந்த காலங்களில் அனுபவித்த இன்னல்களை விட மகா கொடூரமான இன்னல்களை எதிர்காலத்தில் அன்னிய நாட்டவர்களின் ஊடுருவல்களால் அனுபவிக்க நேரிடும் என்பதை இலங்கைத் தமிழர்களின் எதிர்காலத்தை கணித்துப் பார்ப்பவர்களுக்கு தெரிந்திருக்கும்… இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் தமிழர்களின் மனங்கள் படிப்படியாக குறுகிப் போனதிற்குக் காரணம் கடந்த காலங்களில் இலங்கை அரசியலில் நடைபெற்ற கசப்பான சம்பவங்கள்தான் என்பதை எவருமே மறுத்துரைக்க முடியாது. கடந்த காலங்களில் குறுகிய எண்ணங்கொண்டு அரசியில் நடத்திய தமிழ் சிங்கள அரசியல்வாதிகள் இருபாலாருமே இனவெறிப் பகையுணர்வுத் தீச்சுவாலையை இரண்டு இனங்களுக்கும் இடையில் மூட்டி வழர்த்து அந்தச் சூட்டில் சுகமாகக் குளிர்காய்ந்து தங்கள் இறுதி நாட்கள் வரை சுகபோக வாழ்க்கையை அனுபவித்து விட்டுப் போனார்கள் அந்த மகான்கள்…. அந்தக் காலங்களில் இலங்கைப் பாராளுமன்றத்தில் வரிசையாக அரியணையேறிய பிரதம மந்திரிகள் முதல் ஜனாதிபதிகள் வரை இனத்துவேசம் என்னும் கொடிய நோயை இலங்கை மக்களின் மனதில் இருந்து விரட்ட பெரும்பாலும் எந்த விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் அவர்கள் எடுக்க முன் வரவில்லை.. காரணம்.. இந்த இனத் துவேசம்தான் அன்றைய கால கட்டங்களில் அவர்களின் அரசியல் பலமாகவும் இருந்து வந்தது. அவர்கள் பெரும்பாலும் பெரும்பான்மை சிங்கள மக்களின் தலைவராகவே தங்களை காட்டிக் கொண்டார்கள். இதனால் அரசாட்சியை தங்கள் பக்கம் தங்க வைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் ஊறிப் போயிருந்தார்கள் அவர்கள். இப்படியான தலைமைகளை சிங்கள பிற்போக்கு இனவாத அரசியல் தலைவர்கள் வரவேற்றதை விட நமது தமிழ் இனத்தை பகடைக் காய்களாக வைத்து அரசியல் சூதாட்டம் நடத்திய கடந்த கால தமிழ் அரசியல்வாதித் தருமர்கள்தான் பெரிதும் வரவேற்றார்கள்… காரணம்… அவர்களின் அரசியல் பிழைப்புக்கும் இந்த இனத் துவேசம்தான் துரும்புச் சீட்டாக அன்று இருந்து வந்தது. காலம் மாறி காட்சிகளும் மாறியது…. தமிழர்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்திய தன் பழைய அரசியல் எஜமானர்களை அழித்தொழித்த பின் தமிழினத்தை கைப்பற்றி அவர்களை மேலும் மோசமாக ஏமாற்றி அடக்கியாண்ட புலிகளோ ஒருபடி மேலே போய் அப்படிப்பட்ட இனவாத சிங்களத் தலைவர்களை தேர்தல்களில் தெரிவு செய்து இலங்கை பாராளுமன்ற அரியணையில் அமர்த்துவதற்கு தமிழர்கள் தங்கள் வாக்குகளை கட்டாயமாக அளிக்கவேண்டும் என்று அவர்களை நிர்ப்பந்தித்து அதில் வெற்றியும் கண்டார்கள் அவர்கள்…..காரணம்…. இந்த இனவெறிப் பிரச்சார வியாபாரம் இந்த இரு பகுதியினருக்கும் போதிய லாபத்தை ஈட்டித் தந்தது. புலிகளின் காலத்தில் யுத்தமென்றும் யுத்த நிறுத்தமென்றும் பின்னர் ஒரு கட்டத்தில் அண்ணன் தம்பி அக்கா தம்பி உறவு முறை கொண்டாடிக் கொண்டும் சிறிது நாட்கள் கழித்து மீண்டும் வரிந்து கட்டிக் கொண்டு போர் தொடுத்தும் சமாதானம் பேசியும் காலத்தை இழுத்தடித்துக் கொண்டு முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருந்த இந்த “யுத்தமும் சமாதானமும்” என்ற வியாபாரத்தில் அரசாங்கமும் புலிகளும் கூட்டு சேர்ந்து நாடகமாடி மக்களை ஏமாற்றி பலனடைந்து வந்தார்கள். இதற்காக அன்றைய காலகட்டத்தில் புலிகளால் பலி கொடுக்கப்பட்டவர்கள் அத்தனை பேரும் தமிழ் பொதுமக்களும் அவர்கள் பிள்ளைகளும் தான் அதுபோல் இதே காரணத்திற்காக அன்றைய அரசாங்கங்களால் அவர்கள் சார்பில் பலி கொடுக்கப் பட்டவர்கள் யாவருமே சிங்கள பொது மக்களும் அவர்கள் பிள்ளைகளுமே. முன்னொரு காலத்தில் சகோதர உணர்வுடன் சமாதானமாக ஒற்றுமையாய் வாழ்ந்த சிங்கள மக்களையும் தமிழ் மக்களையும் பிரித்து நாட்டை நாசப் படுத்திய இலங்கை அரசியலின் இனபேதக் கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து படிப்படியாக நாட்டு மக்களை அமைதியடையச் செய்து சமூகம் விரும்பும் ஒரு சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கி இலங்கையை வழிநடத்த முற்பட்டது மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம்தான் என்பதை எவருமே மறுத்துரைக்க முடையாது.. பல வருடங்கள் தொடர்ந்த யுத்தத்தினால் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்னோக்கித் தள்ளப்பட்டிருந்த இலங்கையின் பொருளாதாரம் புலிகளின் அழிவிற்குப் பின் முன்னோக்கித் தள்ளப்படுவதற்கும் புலிகளின் பயங்கரவாதச் செயற்பாடுகளால் கடந்த மூன்று தசாப்பதங்களாக அழிவைத் தவிர வேறு எதையுமே கண்டறியாத வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் வழர்ச்சியடையத் தொடங்கி முன்னேற்றம் காண்பதற்கும் வழி வகுத்துக் கொடுத்திருப்பதும் இதே மகிந்தாவின் ஆட்சிதான் என்பதும் மறுக்க முடியாத உண்மைதான், எதிலும் மிகக் கச்சிதமாகக் கணித்து தங்களுடைய எண்ணங்களுக்கும் வியாபாரத்திற்கும் தடையில்லாமல் இருந்தவர்களையே ஆட்சி பீடமேற்ற வகை செய்த புலிகள் மகிந்தாவின் விடயத்தில் முட்டாள்தனமாக தவறிழைத்தது தமிழர்கள் செய்த புண்ணியம் என்றுதான் கூற வேண்டும். மற்றைய இனவாதத் தலைவர்களைப் போல்தான் அவரும் இருப்பார் என்று நம்பித்தான் மகிந்தா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு ஆதரவளித்தார்கள் புலிகள். அவர் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தங்கள் “போரும் சமாதானமும்” வியாபாரத்தை மேலும் வளம்படுத்தலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்த புலிகளுக்கு அவர் முந்திய ஜனாதிபதிகள்போல் அரசியல் நடிகரல்ல என்ற விடயம் காலப் போக்கில் புரிந்தது. .. மகிந்தாவின் ஆட்சியிலும் சமாதானப் பேச்சு வார்த்தைகளை வழக்கம் போலவே குழப்பியடித்து மாவிலாறைப் பூட்டி வலுச் சண்டையை உருவாக்கி இராணுவத்தை சீண்டிப் பார்த்தபோது மகிந்தா என்ற ஜனாதிபதியின் உண்மைத் தோற்றம் புலிகளுக்கு புலப்பட்டது. மற்றைய ஜனாதிபதிகள் போலவே போரில் ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பின் அவரும் பின் வாங்கிச் செல்வார் என்ற புலிகளின் எதிர்பார்ப்பில் மண் அள்ளிப் போட்டார் மகிந்தா. .. புலிகள் எதிர்பார்த்தபடி யுத்தம் நிறுத்தப்படாமல் மகிந்தா நினைத்தபடி தொடர்ந்தது.. விளைவு.. புலிகள் பொறிக்குள் அகப்பட்ட எலிகளானார்கள். வன்னி மக்களை மனிதக் கேடயங்களாக்கி அதன் மூலம் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள எடுத்த இறுதி முயற்சியும் தோல்வியடைந்தது. புலிகள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் சிக்கிக் கொண்டபோதும் அங்கே அவர்களால் சிறை பிடிக்கப்பட்டு மனித அரண்களாக அமைக்கப்பட்டிருந்த அந்த வன்னி மக்களை ஒரு புறத்தால் இராணுவம் காப்பாற்றிக் கொண்டும் மறு புறத்தில் புலிகளை அழிக்கும் பணியும் ஆரம்பமானது. அந்த இறுதி நேரத்தில் கூட தங்கள் உயிர் பாதுகாப்பிற்காக இயன்றவரை அந்த அப்பாவிச் சனங்களை முன்னரங்கில் நிறுத்தி அவர்களைப் பலி கொடுத்து அவர்கள் பின்னே பதுங்கிக் கொண்டார்கள் கோழைப் புலிகள். அதுதான் இறுதி யுத்தம் எந்த விலை கொடுத்தாவது புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த இராணுவம் இயன்றவரை வன்னி மக்களை இறுதி வினாடிவரை காப்பாற்றியபடியேதான் புலிகளை அழித்துக் கொண்டிருந்தார்கள் என்பதற்கு பல இறுதி நேர வீடியோ காட்சிகள் ஆதாரங்களாக இருக்கின்றன. எது வீரம்? அப்பாவி மக்களை கொன்றொழிப்பதும் அவர்கள் பிள்ளைகளை பலி கொடுப்பதும்தான் வீரமா? ஆம் அதுதான் “வீரம்” என்ற சொல்லுக்கு புலிகள் வரைந்த வரைவிலக்கணம். . இந்தப் புலிப் பினாமிகள் கூறுவதுபோல் பிரபாகரனாதியோர் உண்மையான வீரமுள்ளவர்களாக இருந்திருந்தால் அரசாங்கம் போரை நடத்திக் கொண்டிருந்த போது அவர்கள் அறிவித்திருந்த பாதுகாப்பு வலயத்தினுள் பொது மக்களை செல்லவிட்டு பின் யுத்தப் பிரதேசமாக பிரகடனப்படுத்திய பகுதியில் இருந்து அவர்கள் தங்கள் வீரத்தை காட்டியிருக்க வேண்டும். அதுதான் ஒரு உண்மை வீரத்திற்கு அழகு. அதை விடுத்து தங்கள் தோல்வியை மறைப்பதற்காகவும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் சர்வதேசம் தலையிட்டு போரை நிறுத்த வேண்டும் என்பதற்காகவும் வேண்டுமென்றே அந்தப் பாதுகாப்பு வலையத்தினுள் பிரவேசித்து அங்கே பதுங்கியிருந்தபடி தங்கள் ஏவுகணைகளை இராணுவத்தின் பக்கம் ஏவி அங்கிருந்து அவர்களை பாதுகாப்பு வலயத்தை நோக்கி ஏவு கணைகளை ஏவச் செய்து பொது மக்கள் உயிரைப் பலி கொடுத்து தங்களை காப்பாறிக் கொள்ள நினைத்த்து வீரமல்ல அது ஒரு கோழையே செய்யத் தயங்கும் கோழைச் செயலாகும். இன்று மகிந்தாவை தமிழின அழிப்பாளர் என்று சித்தரிக்க முற்படுவர்களே! சற்று சிந்தித்துப் பாருங்கள்! தாலி கட்டப்பட வேண்டிய கழுத்துகளில் சயனைட் தாயத்துக் கட்டிப் போருக்கு அனுப்பிய தமிழினிக்கோ அல்லது தமிழர்களின் செல்வங்கள் அழிந்தொழிந்து போவதற்கு காரணமாக இருந்த தமிழ்ச் செல்வனின் குடும்பத்திற்கோ அல்லது மீசை கூட அரும்பாத விடலைகளை இழுத்துச் சென்று கடலில் பலி கொடுத்த சூசையின் குடும்பத்திற்கோ அல்லது கல்வியூட்டப்பட வேண்டிய மாணவர்களை கல்லறைகளுக்கு அனுப்பக் காரணமாக இருந்த தயா மாஸ்டருக்கோ ஜோர்ஜ் மாஸ்டருக்கோ அல்லது புலிகளின் பாதையைப் புதுப்பித்து மீண்டும் தமிழர்களை மரணப் பாதையில் அழைத்துச் செல்ல முற்பட்ட கே.பி. பத்மனாதனுக்கோ மகிந்தா என்ற மனிதன் எந்த விதமான தீங்கையும் செய்து விடவில்லை. அவர்கள் அனைவரும் சரணடைந்த போதோ அல்லது கைது செய்யப்பட்ட போதோ அவர்களைப் பழி வாங்கவேண்டும் என்று கொன்றொழிகும் எண்ணம் இல்லாமல் அவர்களை மன்னித்து அவர்கள் மனங்களைச் சீர்திருத்தி தன்னுடைய உண்மையான நோக்கம் என்ன என்பதை அவர்களுக்கு புரியவைத்து இன்று அவர்கள் தன்னை விரும்பும்படி செய்த மகிந்தாவின் சாணக்கியம் இன்று பல தமிழ் மக்களை சிந்திக்க வைக்கிறது. .. ஆனால் மகிந்தாவை ஒரு இனத் துவேசியாக ஒரு இன வெறியராக ஒரு இன ஒழிப்பாளாராக சர்வ தேசத்தின் முன் சித்தரிக்க முற்படும் புலிப் பினாமிளுக்கு மகிந்தாவின் இந்த மனிதாபானச் செய்கை ஏமாற்றத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருப்பதில் வியப்பில்லை. இந்த மாஜிப் புலிக் குடும்பங்கள் கண்திறந்து உண்மை யதார்த்தத்தை உணர்ந்து மகிந்தாவிற்கு ஆதரவளிப்பதை புலிப் பினாமிகளால் நிட்சயம் பொறுத்துக் கொள்ள முடியாது ஆகவே இவர்கள் அனைவருமே இன்று புலிகளுக்கு தேசத் துரோகிகளாக தென்பட்டாலும் அது ஆச்சரியப் படுவதற்கில்லை… ஒரு சகோதரனுடன் ஏற்பட்ட பிணக்கை அவனுடன் பேசித் தீர்க்காமல் ஒரு அன்னியனைத் தன் வீட்டிற்கு வரவழைத்து அவன் மூலம் தன் சகோதரனை அடக்க நினைத்தவனை அவன் வேண்டுகோளுக்கு இணங்கி அவன் வீட்டில் நுழைந்த அந்த அன்னியன் அவன் சகோதரனை அடக்கி ஒடுக்கிய பின் அவனையும் அடக்கி முடிவில் அவன் குடும்பத்தார் அனைவரையுமே தன் அடிமைகளாக்கிக் கொண்டது போல் தான் இன்று நமது சகோதரனுடனான பிரச்சனையில் சர்வ தேசத்தை கொண்டு வந்து தீர்க்க நினைக்கும் புலிப் பினாமிகளின் கதையும் முடியப் போகிறது. எந்தப் பிரத்தானியர் இலங்கையை கைப்பற்றி அதை தங்கள் இராச்சியமாக்கி நம்மையெல்லாம் அடக்கியாண்டு எம்மை நாயிலும் கேவலமாக நடத்தினார்களோ அதே அடக்கியாண்ட எஜமான்களிடம் வெட்கமில்லாமல் நமது சகோதரனை சர்வதேச நீதி மன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று மண்டியிடுபவர்களே! உங்களிடம் கேட்கிறேன்! ஈராக்கில் சதாம் குசைனை அழிக்கப் புறப்பட்ட அமெரிக்காவின் இராணுவம் ஈராக்கில் வீடு வீடாகப் புகுந்து சதாம் குசைனின் ஆதரவாளர்கள் என்று சந்தேகப்பட்ட அத்தனைபேரையும் குடும்பம் குடும்பமாக கொன்றொழித்த போது எங்கே போயிருந்தது இந்த சர்வதேசம்? இதற்கு கட்டளையிட்ட அன்றைய ஜனாதிபதி புஷ்யை ஏன் அவர்களால் சர்வதேச நீதி மன்றத்தின் முன் நிறுத்த முடியவில்லை? ஆம் தட்டிக் கேட்க முடியாத அமெரிக்காவின் பலம் அப்படிப்பட்டது. மகிந்தா நடத்திய போர் தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல. அது புலிகளுக்கு எதிரானது. இறுதி நேரத்தில் புலிகள் சுற்றி வளைக்கப்பட்டு ஒரு குறுகிய நிலப்பரப்பில் அவர்கள் பொதுமக்களுடன் ஒடுக்கப்பட்டபோதும் கூட அங்கிருந்த பொது மக்களின் உயிர்ப் பாதுகாப்புக் கருதி மெதுவாகவே முன்னேறியது இலங்கை இராணுவம். அந்த வேளையில் கூட பிரபாகரனாதியோர் தப்புவதற்குரிய அனுகூலங்கள் சில இருந்தன. அப்படியான சூழ்நிலையில் விமானத் தாக்குதல் மூலம் அந்த குறுகிய நிலப்பரப்பை சில நிமிடங்களில் தரை மட்டமாக்கியிருக்க முடியும் ஆனால் அப்படிச் செய்யாது தரை மார்க்கமாகவே தாக்குதல் நடத்தப்பட்டது… காரணம்.. புலிகளால் வேண்டுமென்றே முன்னரங்கில் நிறுத்தப்பட்டிருந்த பொதுமக்களின் உயிர்களை பாதுகாக்க வேண்டும் என்பதால்தான். மேலும் யுத்தம் முடிந்த பின்னும் அங்கிருந்து ஆயிரக் கணக்கான பொதுமக்கள் மீட்கப் பட்டதும் சரணடைந்த பல்லாயிரக் கணக்கான புலி வீரர்கள் கைது செய்யப்பட்டதும் இலங்கை இராணுவத்திற்கு தமிழ் மக்களை அழிக்கும் நோக்கம் இருக்கவில்லை என்பது நிரூபிக்கிறது. ஆனால் தற்போது போரினால் பலமிழந்து பொருளாதார ரீதியில் வலுவிழந்து இருக்கும் நமது இலங்கைத் தீவை தாங்கள் நினைத்தபடியெல்லாம் ஆட்டிப் படைக்கலாம் என்ற ஆணவம் அவர்களுக்கு. ஆனால் அவர்கள் பாச்சா மகிந்தாவிடம் பலிக்கவில்லை. அவர்களின் ஆணவத்திற்கும் அதிகாரத்திற்கும் அடிபணிய மறுத்தார் மகிந்தா. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் தான் பிறந்த நாட்டின் சுய கௌரவத்தை பாதுகாக்க முயலும் அந்த தேசத்தை நேசிக்கும் தலைவரை சர்வதேச நீதிமன்றத்தின் முன் எப்படியாவது நிறுத்தி அவமானப்படுத்த அவர்கள் தற்போது எடுக்கும் முயற்சிகள் தெளிவாகத் தெரிகிறது. பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிறவுணின் ஆதரவுடன் எதையுமே புலிப் பினாமிகளால் இலங்கையில் சாதித்துவிட முடியாது. நமது நாட்டின் இறைமையையும் அதன் கௌரவத்தையும் பாதுகாக்க ஒரு துணிவுள்ள ஒரு ஜனாதிபதி உள்ளவரையும் இந்த சர்வதேச முதலாளிகள் எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட அவர் அனுமதிக்கப் போவதில்லை என்பது சர்வ நிட்சயமே. நாம் இருக்கும் காலம் மட்டும் வசதியாக வாழ்ந்து விட்டுப் போய்விடுமோம் என்று வாழ்ந்து விட்டுப் போய் விடுவதில்லை சர்வதேச பொருளாதார வளம் பெற்ற நாடுளை வழி நடத்துபவர்கள். தங்கள் சந்ததியால் சாதிக்க முடியாவிட்டாலும் தங்களுடைய காலத்திற்குப் பின் தோன்றப் போகும் தங்கள் எதிர்காலச் சந்திதகளுக்காக ஏதாவதொன்றைஆரம்பித்து வைத்து எதிர்காலத்தில் அவர்கள் அதை விரிவுபடுத்தி ஆண்டு அனுபவிக்க வேண்டும் என்ற எதிர்காலச் சிந்தனையுள்ளவர்கள் அவர்கள். அவர்களில் பலரின் கண்களின் குறிப்பாக பிரித்தானியாவின் கண்களில் இன்று தெரிவது சகல வழங்களுடன் தாங்கள் ஒரு காலத்தில் ஆண்டு அனுபவித்த இலங்கைத் தீவில் ஒருமுறை தனது நாட்டின் புதிய தலைமுறையொன்று ஏதோவொரு வழியில் அந்த வளங்களை மீண்டும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக போடும் முதல் அஸ்திபாரம்தான் கோர்டன் பிறவுன் புலிப் பினாமிகளுடன் கூட்டுச் சேர்ந்திருப்பது என்பது… இன்று மகிந்தாவின் அரசாங்கம் பிரபாகரனின் அர்த்தமற்ற போரினால் இழந்து போயிருந்த வடக்குத் தமிழர்களின் கல்வியையும் பொருளாதாரத்தையும் மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகளில் கருத்துடன் ஈடுபட்டுள்ளது. பல கோடி ரூபா செலவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பல பாடசாலைகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. சில பாடசாலைகள் கணணி மயப்படுத்தப் படுகின்றன. தமிழ் வர்த்தக முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தற்போது கனடாவிலுள்ள சில தமிழ் முதலீட்டாளர்கள் அண்மையில் ஜனாதிபதியைச் சந்தித்து தங்கள் வர்த்தக முதலீடு சம்பந்தமாக கலந்துரையாடியுள்ளனர். இப்படி ஒரு புதிய தமிழ் தலைமுறைக்கான ஆரோக்கியமான ஏற்பாடுகள் ஆரம்பமாகிக் கொண்டிருக்கின்றன. (பல பின் தங்கிய சிங்களப் பாடசாலைகளில் இன்னும் ஆங்கிலக் கல்விகூட ஆரம்பிக்கப்படவில்லை என்பது வேறு விசயம்) மேலும் வடக்குக் கிழக்கிற்கான வழர்சிக்காக முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது புலிப் பினாமிகள் பிரித்தானியரிடம் இலங்கையில் பொருளாதாரத் தடையை கொண்டு வரும்படி கோரிக்கை விட்டிருப்பது ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. பைத்தியக்காரர்களே! இதனால் பாதிக்கப்படப் போவது சிங்கள மக்களுடன் சேர்த்து நமது தமிழர் சமூதாயமும்தானே என்று ஏன் உங்கள் எண்ணத்தில் உறைக்கவில்லை. வேண்டாம்… தயவு விட்டு விடுங்கள் உங்கள் பிரிவினை வியாபாரத்தை! வேண்டாம்… விட்டு விடுங்கள் உங்கள் விதண்டாவாதங்களை!.. வேண்டாம் மீண்டும் ஒரு மனித அழிவு இந்த நாட்டில்!. வாழுங்கள் வழமுடன்! அதுபோல் எங்கள் மக்களையும் வாழ விடுங்கள்!. இந்த அரசாங்கத்தில் சமாதானத்தின் கதவுகள் இன்னும் அகலமாகத் திறந்திருக்கிறது. பகை இனிமேலும் வேண்டாம்…பேசித் தீர்ப்போம் நம் பிரச்சனைகளை… நமக்கு மிக அருகில் அமைதித் தேவதை சமாதானப் புறாவை நம்மிடம் வழங்குவதற்காக தன் கையில் அதனுடன் காத்துக் கொண்டிருக்கிறாள். நடந்து முடிந்த துர்வாடை வீசும் அந்தக் கடந்த காலக் குப்பைகளை குழி வெட்டிப் புதைத்து அதன்மேல் சமாதானப் பூக்களின் விதைகளை விதைப்போம் வாருங்கள்! அவைகள் அங்கே சமாதானப் பூக்களாக பூத்துக் குலுங்கி நறுமணம் வீசட்டும்… அவைகளின் அடியில் புதைக்கப் பட்டிருக்கும் அந்தக் கடந்த கால குப்பைகள் அந்த சமாதானப் பூக்களுக்கு எருவாகிப் போகட்டும்…(தொடரும்) அன்புடன் சித்திறெஜினா  Read More »

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும்.. –சித்திறெஜினா (பாகம் 44)

ஏனைய செய்திகள்

மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதற்கும் தேர்தல் நடவடிக்கைளில் ஈடுபடுவதற்கும் அவசரகால சட்டம் பெரும் தடையாக உள்ளது -ஐ.தே.கட்சி! // ஒஸ்லோ பிரகடனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது -ரி.எம்.வி.பி! குருவிட்டவில் யுவதியின் சடலம் மீட்பு!

மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதற்கும் தேர்தல் நடவடிக்கைளில் ஈடுபடுவதற்கும் அவசரகால சட்டம் பெரும் தடையாக உள்ளது -ஐ.தே.கட்சி! // ஒஸ்லோ பிரகடனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது -ரி.எம்.வி.பி! குருவிட்டவில் யுவதியின் சடலம் மீட்பு!

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் 13வது திருத்தச் சட்டமூலம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென ரி.எம்.வி.பி சுட்டிக்காட்டியுள்ளது. ஒஸ்லோ பிரகடனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என கட்சி அறிவித்துள்ளது. 13வது திருத்தச் சட்டமூல அமுலாக்கம் மற்றும் ஒஸ்லோ பிரகடனத்தை நிராகரித்தல் ஆகியன தமது கட்சியின் பிரதான கொள்கைகளாகும் என கட்சியின் ஊடகப் பேச்சாளர் அசாத் மௌலான தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத்தேர்தலின் பின்னர் 13வது திருத்தச் சட்டமூல அமுலாக்கம் தொடர்பில் முதலமைச்சர் சந்திரகாந்தன், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். [...]

வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு விவாக, பிறப்பு, இறப்பு சான்றுகள் கணினி மூலம் வழங்க நடவடிக்கை! // ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஸ திடீர் யாழ். விஜயம்! // இலங்கைக்கு எதிராக மேற்குலகம் செயற்படும் போது, மௌனம் காத்திருக்க முடியாது- பாலஸ்தீனம்!

வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு விவாக, பிறப்பு, இறப்பு சான்றுகள் கணினி மூலம் வழங்க நடவடிக்கை! // ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஸ திடீர் யாழ். விஜயம்! // இலங்கைக்கு எதிராக மேற்குலகம் செயற்படும் போது, மௌனம் காத்திருக்க முடியாது- பாலஸ்தீனம்!

ஜனாதிபதியின் புதல்வரும் தற்போது அரசியல்களம் குதித்துள்ளவருமான நாமல் ராஜபக்ஸ திடீர் விஜயமாக நேற்று யாழ்ப்பாணம் சென்றுள்ளார். இதன்போது யாழ்ப்பாணம் நயினாதீவு நாகவிகாரைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். கடற்படையினரின் பாதுகாப்புடன் தனது தொண்டர்கள் சகிதம் அவர்கள் சென்றிருந்தனர். எதிர்வரும் தேர்தலில் மகிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவாக வாக்குகளைத் திரட்டும் நோக்கில் நேற்றுமாலை யாழ்ப்பாணம் சென்றிருந்த அவர், இன்றும் அங்கேயே தங்கியுள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஈபிடிபி கட்சி வெற்றிலைச் சின்னத்தில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுகிறது. இதனிடையில் தொழில்நுட்பக [...]

மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் இராணுவ நெருக்குவாரங்களின் கீழேயே வாழ்க்கை -ஆயர்கள் தகவல்! // ரஜரட்ட பல்கலை தொழில்நுட்ப உதவியாளர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை! // களுத்துறை பிரதேசசபையின் தலைவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்..!

மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் இராணுவ நெருக்குவாரங்களின் கீழேயே வாழ்க்கை -ஆயர்கள் தகவல்! // ரஜரட்ட பல்கலை தொழில்நுட்ப உதவியாளர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை! // களுத்துறை பிரதேசசபையின் தலைவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்..!

வன்னியில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்கள் முற்றுமுழுதாக ராணுவ நெருக்குவாரங்களின் கீழேயே வாழ்ந்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அண்மையில் இலங்கை கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர்குழு ஒன்று மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடி விஜயம் செய்திருந்தது. யாழ்ஆயர் அதி வணக்கத்திற்குரிய தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தலைமையில் இடம்பெற்ற இக்குழுவில் குருநாகல், பதுளை, ரத்தினபுரி, சிலாபம், மன்னார் குருமுதல்வர் அன்ரனி விக்ரர் சூசை ஆகியோரும் விஜயம் செய்திருந்தனர். முல்லைத்தீவு , கிளிநொச்சி பங்குத் தந்தை அருட்திரு ஜோன் அடிகளார் இவர்களுக்கான [...]

அதிரடியின் இன்றைய விசேட செய்தித் துணுக்குகள்..

அதிரடியின் இன்றைய விசேட செய்தித் துணுக்குகள்..

மதவாச்சி இக்கிரிகொல்லாவ குளத்தின் அருகிலிருந்து சிறுமியொருவரின் சடலம் மீட்பு- அனுராதபுரம் மதவாச்சி இக்கிரிகொல்லாவ குளத்தின் அருகிலிருந்து சிறுமியொருவரின் சடலம் பொலீசாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்றுகாலை பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மதவாச்சிப் பொலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வெல்லம்பிட்டி பாலத்துக்கு கீழிருந்து ஆணின் சடலம் மீட்பு- கொழும்பு வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதின்னாகொட பாலத்துக்குக் கீழிருந்து ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை கொழும்பு, மட்டக்குளிய இராணுவ முகாமுக்கு அருகில் இருந்து நேற்றுமுன்தினம் [...]

ஊடகவியலாளர் எக்னெலிகொட தொடர்பில் இருவாரங்களில் தகவல் வெளியிடப்படும் -பொலிஸார்! // இராணுவ முகாம்களுக்குள் தடுப்பு முகாம்களை அமைத்துள்ளதால் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதென மனுத்தாக்கல்! // நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது -எதிர்கட்சித் தலைவர்!

ஊடகவியலாளர் எக்னெலிகொட தொடர்பில் இருவாரங்களில் தகவல் வெளியிடப்படும் -பொலிஸார்! // இராணுவ முகாம்களுக்குள் தடுப்பு முகாம்களை அமைத்துள்ளதால் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதென மனுத்தாக்கல்! // நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது -எதிர்கட்சித் தலைவர்!

காணாமல் போன லங்கா ஈ நியுஸ் இணையத்தள ஆசிரியர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் தகவல் வெளியிடப்படும் என காவல்துறை திணைக்களம் அறிவித்துள்ளது. ஊடகவியலாளர் காணாமல் போன சம்பவம் குறித்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுத் திணைக்களம் விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 1ம் திகதிவரையில் மிரிஹான காவல்துறையினரால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடதக்கது. இதேவேளை தமது கணவரை கண்டுபிடித்துக் கொடுக்குமாறு ஊடகவியலாளர் எக்னெலிகொடவின் மனைவி பல்வேறு தரப்பினரிடம் முறைப்பாடுகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடதக்கது.
அவசரகால [...]

ஐக்கிய தேசிய முன்னணியின் மொனராகலை மாவட்ட வேட்புமனுவை ரத்து செய்யுமாறு மனுத்தாக்கல்! // அனைத்து வேட்பாளர்களும் விஷேட அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் -தேர்தல் ஆணையாளர்!

ஐக்கிய தேசிய முன்னணியின் மொனராகலை மாவட்ட வேட்புமனுவை ரத்து செய்யுமாறு மனுத்தாக்கல்! // அனைத்து வேட்பாளர்களும் விஷேட அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் -தேர்தல் ஆணையாளர்!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் சகல வேட்பாளர்களும் விஷேட அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். தற்காலிக அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்காக சகல வேட்பாளர்களும் தெரிவத்தாட்சி அதிகாரிகளின் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வேட்பாளர்களின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த தற்காலிக அடையாள அட்டை இன்றி வாக்குச் சாவடிகளுக்கோ அல்லது வாக்கு எண்ணும் நிலையங்களுக்கோ அனுமதிக்கப்பட மாட்டாது என [...]

சிவராத்திரி தினத்தன்று ஒலிபெருக்கிக்கு அனுமதி பெற்றுக் கொள்ள முடியும்! // வாக்குகளைச் சிந்தித்து நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் தீர்மானங்களை மேற்கொண்டதில்லை -ஜனாதிபதி!

சிவராத்திரி தினத்தன்று ஒலிபெருக்கிக்கு அனுமதி பெற்றுக் கொள்ள முடியும்! // வாக்குகளைச் சிந்தித்து நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் தீர்மானங்களை மேற்கொண்டதில்லை -ஜனாதிபதி!

வாக்குகளைச் சிந்தித்து நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் தீர்மானங்களைத் தாம் மேற்கொண்டதில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும், நாட்டின் எதிர்கால பரம்பரையின் நலன்கள் பற்றிச் சிந்தித்தே அபிவிருத்திக்கான சகல தீர்மானங்களையும் மேற்கொண்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மாத்தறை பெலியத்த தேர்தல் தொகுதியின் சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களை நேற்றுச் சந்தித்துள்ள ஜனாதிபதி இம்முறை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் அபேட்சகர்கள் கிராமத்தை நேசித்து கிராம மக்களின் விருப்பு வெறுப்புகளை நண்குணர்ந்தவர்களே எனவும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த [...]

வடமராட்சி கடற்தொழிலாளர்கள் இந்திய இழுவைப்படகுகளின் செயற்பாடுகளால் பெரிதும் பாதிப்பு! // ஜெனரல் பொன்சேகா முன்னாள் இராணுவ அதிகாரிகளை துன்புறுத்தினார் -அரசாங்கம் தெரிவிக்கிறது

வடமராட்சி கடற்தொழிலாளர்கள் இந்திய இழுவைப்படகுகளின் செயற்பாடுகளால் பெரிதும் பாதிப்பு! // ஜெனரல் பொன்சேகா முன்னாள் இராணுவ அதிகாரிகளை துன்புறுத்தினார் -அரசாங்கம் தெரிவிக்கிறது

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவதளபதியாக இருந்த காலத்தில் தமக்கு கீழ் பணிபுரிந்த இராணுவ அதிகாரிகளை துன்புறுத்தியதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது இந்த தகவலை வெளிநாட்டு இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் உரையாற்றிய போது தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் இயக்குனர் லக்ஷ்மன் ஹ_லுகல்ல தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா இராணுவ அதிகாரியாக இருந்த காலங்களில் தமது காரியாலயத்தில் வைத்தே இராணுவ அதிகாரிகளை துன்புறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது அத்துடன் [...]

கூடுதல் விலையில் அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை சட்டத்திற்குமுன் நிறுத்த இன்றுமுதல் நாடளாவிய ரீதியில் விசேட முற்றுகை! // எமது நாடு எந்தவொரு வெளிநாட்டிற்கும் அடிமை அல்ல -பிரதமர்!

கூடுதல் விலையில் அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை சட்டத்திற்குமுன் நிறுத்த இன்றுமுதல் நாடளாவிய ரீதியில் விசேட முற்றுகை! // எமது நாடு எந்தவொரு வெளிநாட்டிற்கும் அடிமை அல்ல -பிரதமர்!

எமது நாடு எந்தவொரு வெளிநாட்டிற்கும் அடிமை அல்ல. அரசுக்கு எதிரான சக்திகளுக்கும், நாடுகளுக்கும் தகவல்களை வழங்குபவர்களுக்கு எதிராக வேலி கட்டவேண்டும் என பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணையை சமர்ப்பித்து பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் இரண்டாவது தடவையாகவும் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்காக நேற்று சபாநாயகர் வி.ஜே.மு. லொக்குபண்டார தலைமையில் கூடியது. பிரதி பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் [...]

அமைச்சர்களின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களே அரசியல் எதிராளிகளின்மீது தாக்குதல் நடத்துவது வேடிக்கையாகும் -ரவூப் ஹக்கீம்! // தர்காநகர் மீரிபன்னை முஸ்லிம் வர்த்தகர் படுகொலை!

அமைச்சர்களின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களே அரசியல் எதிராளிகளின்மீது தாக்குதல் நடத்துவது வேடிக்கையாகும் -ரவூப் ஹக்கீம்! // தர்காநகர் மீரிபன்னை முஸ்லிம் வர்த்தகர் படுகொலை!

அரசியல் எதிரிகள்மீது அமைச்சர்களின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களே தாக்குதல்களை மேற்கொள்வது வேடிக்கையான விடயமாக இருக்கின்றது என்பதுடன் அரசாங்கத்தின் அராஜகத்தை கட்டவிழ்த்து விடுவதற்கே அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுகின்றது என்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணைமீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மன்னாரில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளர்மீது அமைச்சரொருவரின் அடியாட்கள் தாக்குதல் நடத்தியமையினால் மன்னாரில் வர்த்தகர்கள் கடைகளை மூடி எதிர்ப்பு [...]

தமிழர் தமது உரிமைகளை வென்றெடுக்க இந்தியாவை நம்பியது தவறு -பேராசிரியர் அ.மார்க்ஸ்! // இலங்கைக்கு எதிராக ரோ அமைப்பு செயற்படவில்லை என்கிறது இந்தியா!

தமிழர் தமது உரிமைகளை வென்றெடுக்க இந்தியாவை நம்பியது தவறு -பேராசிரியர் அ.மார்க்ஸ்! // இலங்கைக்கு எதிராக ரோ அமைப்பு செயற்படவில்லை என்கிறது இந்தியா!

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ரோ எனப்படும் இந்திய வெளித்தொடர்பு புலனாய்வுத் துறையினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மஹிந்த ராஜபக்ஷ இந்த தேர்தலில் தோல்வி அடைவதற்கு ஏதுவாக அவர்கள் செயற்பட்டதாக தபால்துறை அமைச்சர் நந்தன குணதிலக்க குற்றம் சுமத்தியுள்ளார். ரோ எனப்படும் இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் ஒப்புநோக்கு கண்காணிப்பகம் மற்றும் வெளித்தொடர்பு புலனாய்வு அமைப்பு என்பன ஜனாதிபதிக்கு எதிராக செயற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை [...]

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசத்திற்காக தமது சம்பளங்களை அர்ப்பணிக்க வேண்டும் -மேர்வின் சில்வா கோருகிறார்! // முல்லைத்தீவு, வவுனியா வேலைத்திட்டங்கள் தொடர்பிலான கூட்டம்! // மங்கள சமரவீர உரிமைமீறல் மனுதாக்கல்!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசத்திற்காக தமது சம்பளங்களை அர்ப்பணிக்க வேண்டும் -மேர்வின் சில்வா கோருகிறார்! // முல்லைத்தீவு, வவுனியா வேலைத்திட்டங்கள் தொடர்பிலான கூட்டம்! // மங்கள சமரவீர உரிமைமீறல் மனுதாக்கல்!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமது சம்பளங்களை தேசத்திற்காக அர்ப்பணிக்க வேண்டுமென தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். மாதத்தில் ஒரேஒருநாள் பாராளுமன்ற அமர்வுகள் நடத்தப்பட்டமைக்காக சம்பளம் கோருவது நியாயமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மாதத்திற்கான சம்பளத்தை தாம் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதேபோன்று ஏனைய அனைவரும் தங்களது சம்பளங்களை தியாகம் செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.  தம்மை முன் உதாரணமாகக் கொண்டு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் செயற்பட வேண்டுமென அவர் சுட்டிக் [...]

ஜேர்மனியில் புலி செயற்பாட்டாள்கள் 6பேர் கைதின் பின்னனியில் இலங்கை தூதரகம்! // சுவிஸ்நாட்டில் கறுப்பர்கள் முக்கியத்துவம்பெற கல்வியே காரணம்!  // சீன உயர்ஸ்தானிகர் வவுனியா விஜயம்!

ஜேர்மனியில் புலி செயற்பாட்டாள்கள் 6பேர் கைதின் பின்னனியில் இலங்கை தூதரகம்! // சுவிஸ்நாட்டில் கறுப்பர்கள் முக்கியத்துவம்பெற கல்வியே காரணம்! // சீன உயர்ஸ்தானிகர் வவுனியா விஜயம்!

ஜேர்மனியில் கடந்தவாரம் புலி செயற்பாட்டாள்கள் 6பேர் கைதுசெய்யப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் தாமே இருந்ததாக அங்குள்ள இலஙகை தூதரகம் அறிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட ஆட்கள் தொடர்பாக ஜேர்மனிய புலனாய்வுத்துறையினருக்கு இரகசியத் தகவல்களைத் தாமே வழங்கியதாக இலங்கைத்தூதரகம் கூறியுள்ளது. ஜேர்மனிக்கான இலங்கையின் பிரதித் தூதுவராக பேர்லினில் பணியாற்றும் மேஜர்ஜெனரல் ஜெகத் டயஸ் இதை தெரிவித்துள்ளார். இலங்கையில் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டார்கள். ஆனால், வெளிநாடுகளில் சிலர் புலிகளின் பெயரில் இன்னும் இயங்கி வருகின்றார்கள். இது இலங்கையின் இறைமைக்கும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தானது [...]

அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளை கைவிடப் போவதில்லை -ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெசனல்! // கபேயின் இணையத்தளம்மீது தடை! // நமது நிறைவேற்றுப் பணிப்பாளரைக் கைதுசெய்யத் திட்டம் -ஆசிய மனித உரிமை ஆணைக்குழு!

அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளை கைவிடப் போவதில்லை -ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெசனல்! // கபேயின் இணையத்தளம்மீது தடை! // நமது நிறைவேற்றுப் பணிப்பாளரைக் கைதுசெய்யத் திட்டம் -ஆசிய மனித உரிமை ஆணைக்குழு!

தமது அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜே.சீ. வெலிமுனவை கைதுசெய்யத் திட்டமிட்டுள்தாக ஆசிய மனிதஉரிமை ஆணைக்குழுவின் இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இதுவரையில் அவ்வாறான எந்தவொரு முனைப்பும் நேரடியாக மேற்கொள்ளப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் வன்முறைகள் மற்றும் அரச சொத்து துஸ்பிரயோகம் போன்றவை தொடர்பில் தமது அமைப்பு கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எமது நிறுவனத்தின் நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் எதனையும் மறைக்க வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் [...]

தெல்லிப்பழையில் வைத்தியசாலை மற்றும் புற்றுநோய் வைத்தியசாலை அமைந்துள்ள பிரதேசங்கள் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியிலிருந்து நீக்கம்! // கிளிநொச்சி இராணுவ நினைவுத்தூபியில் சரத்பொன்சேகாவின் பெயர் நீக்கம்!

தெல்லிப்பழையில் வைத்தியசாலை மற்றும் புற்றுநோய் வைத்தியசாலை அமைந்துள்ள பிரதேசங்கள் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியிலிருந்து நீக்கம்! // கிளிநொச்சி இராணுவ நினைவுத்தூபியில் சரத்பொன்சேகாவின் பெயர் நீக்கம்!

கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இராணுவ நினைவுத்தூபியில் பொறிக்கப்பட்டிருந்த முன்னாள் கூட்டுப்படை தலைமை அதிகாரி சரத்பொன்சேகாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப்புலிகளுடனான வெற்றியின் போது படைத்தரப்பில் முக்கிய பங்காற்றியவர்களின் பெயர்கள் இந்த நினைவுத்தூபியில் பொறிக்கப்பட்டிருந்தன அதில் சரத்பொன்சேகாவின் பெயரும் முதல் நிலையில் பொறிக்கப்பட்டிருந்தது எனினும் தற்போது அரசாங்கத்திற்கும் சரத் பொன்சேகாவுக்குமிடையிலான முரண்பாட்டை அடுத்து அவரது பெயர் நீக்கப்பட்டு புதிய நினைவு கல்வெட்டுடனான தூபி நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இது அரசாங்கத்தின் உயர்மட்ட உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள [...]

யாழ். நகர விளம்பர நடவடிக்கைகளால் கைகலப்பு வரை செல்லும் நிலை! // கடந்த இரண்டு மாதங்களில் 3 மில்லியன் உல்லாசப் பயணிகள் வடக்கிற்கு வருகை! // பொட்டு அம்மானுடன் தொடர்புகளைப் பேணிய சுங்க உத்தியோகத்தர்கள் கைது!

யாழ். நகர விளம்பர நடவடிக்கைகளால் கைகலப்பு வரை செல்லும் நிலை! // கடந்த இரண்டு மாதங்களில் 3 மில்லியன் உல்லாசப் பயணிகள் வடக்கிற்கு வருகை! // பொட்டு அம்மானுடன் தொடர்புகளைப் பேணிய சுங்க உத்தியோகத்தர்கள் கைது!

புலிகளின் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் பொட்டு அம்மானுடன் தொடர்புகளைப் பேணிய இரண்டு சுங்க உத்தியோகத்தர்களை பொலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யுத்தநிறுத்த உடன்படிக்கை காலப்பகுதியில் குறித்த சந்தேகநபர்கள் பொட்டு அம்மானைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விமானநிலையம் மற்றும் துறைமுகம் ஆகியவற்றின் ஊடாக புலிகளுக்கு பொருட்களை அனுப்பி வைத்ததாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் பொருட்களை வன்னிக்கு எடுத்துச் செல்ல விமானநிலையம் மற்றும் துறைமுகம் ஆகியவற்றில் முகவர்களை புலிகள் பயன்படுத்தியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த இரண்டு [...]

உலகத்தமிழர் பேரவை மாநாட்டில் டேவிட் மில்லிபாண்ட் உரையாற்றிய விவகாரம் சூடு பிடிப்பு! // லியொன் பெஸ்கோ இலங்கைக்கு விஜயம் செய்ததன் பின்னரே நிபுணர்கள்குழு நியமிக்கப்படும் -ஐ.நா! // ஜனாதிபதி தந்த வாக்குறுதியில் முன்னேற்றமில்லை -பான் கீ மூன்!

உலகத்தமிழர் பேரவை மாநாட்டில் டேவிட் மில்லிபாண்ட் உரையாற்றிய விவகாரம் சூடு பிடிப்பு! // லியொன் பெஸ்கோ இலங்கைக்கு விஜயம் செய்ததன் பின்னரே நிபுணர்கள்குழு நியமிக்கப்படும் -ஐ.நா! // ஜனாதிபதி தந்த வாக்குறுதியில் முன்னேற்றமில்லை -பான் கீ மூன்!

கடந்த ஆண்டு போர் முடிந்த கையோடு இலங்கைக்கு வந்த ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கீ மூன் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த வாக்குறுதிகளை மட்டும் ஏற்றுக் கொண்டு எதுவும் பேசாமல் திரும்பியிருந்தது தெரிந்ததே. இப்போது அந்த வாக்குறுதிகளை கொடுத்து ஒரு ஆண்டு ஆகும்நிலையில் தமக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் முன்னேற்றம் எதுவுமில்லை என பான் கீ மூன் விசனம் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனை குறித்து தாம் ஜனாதிபதியுடன் பேசியுள்ளதாகவும் தாம் அமைக்கவுள்ள வல்லுநர் குழுவானது இவ்விடயங்கள் [...]

ஊவா மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் பிணையில் விடுதலை! // ஜெனரல் சரத்பொன்சேகா உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளார் -அனோமா பொன்சேகா! // ஐ.நா தனது உதவிச் செயலரை இலங்கை அனுப்புகிறார்

ஊவா மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் பிணையில் விடுதலை! // ஜெனரல் சரத்பொன்சேகா உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளார் -அனோமா பொன்சேகா! // ஐ.நா தனது உதவிச் செயலரை இலங்கை அனுப்புகிறார்

உண்ணாவிரதமிருந்த ஜெனரல் சரத்பொன்சேகா அதனைக் கைவிட்டுள்ளதாக அவரது பாரியார் அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். அவருக்கு வழங்கப்பட்டுள்ள தொலைபேசி ஊடகா இரண்டு மகள்மாருடனும் அழைப்பினை ஏற்படுத்துவதற்கு அவருக்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்தே உண்ணாவிரதத்தை அவர் கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 11மணியளவில் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு தனது தொலைபேசியை உபயோகிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஊவா மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் உபாலி சமரவீர இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஊவா பரணகம பொலீசாரினால் வெலிமடை நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று [...]

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயல்களினாலேயே சர்வதேச சமூகத்தின் அழுத்தங்கள் -ஜ.தே.கட்சி! // பிரித்தானிய அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்! // அவசரகால சட்டம் மேலுமொரு காலத்திற்கு நீடிப்பு

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயல்களினாலேயே சர்வதேச சமூகத்தின் அழுத்தங்கள் -ஜ.தே.கட்சி! // பிரித்தானிய அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்! // அவசரகால சட்டம் மேலுமொரு காலத்திற்கு நீடிப்பு

பிரித்தானிய அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். பிரித்தானியாவிற்கும் இலங்கைக்குமிடையில் அண்மையில் நிலவிவரும் முறுகல்நிலைமை குறித்து கலந்துரையாடும் நோக்கில் இந்த அதிகாரிகள் குழு இன்று இலங்கைக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது. பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபாண்ட் அண்மையில் க்ளோபல் தமிழ் போராம் அமைப்பினால் நடத்தப்பட்ட மாநாடு ஒன்றில் கலந்து கொண்டமைக்கு இலங்கை கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. இந்த விடயங்கள் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் பிரித்தானிய இராஜதந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயல்களினாலேயே சர்வதேச சமூகத்தின் [...]

தேர்தல் தொடர்பிலான வன்முறைகள் அதிகரிப்பு! // பம்பலப்பிட்டி கடலில் அனர்த்தத்திற்கு உள்ளான கடற்படைப் படகு அப்புறப்படுத்தப் பட்டது! // நீண்டகாலமாக நிரந்த வீடுகள் இல்லாதவர்களுக்கு புதிய வீடுகளை வழங்கும் விசேட திட்டம்!

தேர்தல் தொடர்பிலான வன்முறைகள் அதிகரிப்பு! // பம்பலப்பிட்டி கடலில் அனர்த்தத்திற்கு உள்ளான கடற்படைப் படகு அப்புறப்படுத்தப் பட்டது! // நீண்டகாலமாக நிரந்த வீடுகள் இல்லாதவர்களுக்கு புதிய வீடுகளை வழங்கும் விசேட திட்டம்!

கொழும்பு பம்பலப்பிட்டி கடலில் நேற்றுமாலை அனர்த்தத்திற்கு உள்ளான கடற்படைப் படகை அந்தப் பிரதேசத்திலிருந்து அப்புறப்படுத்தி உள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். நேற்றுமாலை 3.30 மணியளவில் படகு அனர்த்தத்திற்கு உள்ளான போது ஐந்து கடற்படை வீரர்கள் கடலில் வீழ்ந்ததாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கப்டன் அத்துல சேனாரத் தெரிவித்துள்ளார். கடலில் வீழ்ந்த கடற்படை வீரர்கள் ஐவரும் எவ்வித பாதிப்புமின்றி உயிர் தப்பியுள்ளனர். படகின் இயந்திரக் கோளாறு காரணமாகவே அனர்த்தம் இடம்பெற்றதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை குறித்த கடற்படைப் படகு அனர்த்தத்தில் [...]

மனோகணேசன் நாடாளுமன்றத்தில் சுலோகம் ஏந்திப் போராட்டம்! // பொலீஸ் சிறையிலிருந்து தப்பிச்சென்ற இருவர் பொலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு! // தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே தனது பிரதான நோக்கமாகும் -ஜனாதிபதி!

மனோகணேசன் நாடாளுமன்றத்தில் சுலோகம் ஏந்திப் போராட்டம்! // பொலீஸ் சிறையிலிருந்து தப்பிச்சென்ற இருவர் பொலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு! // தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே தனது பிரதான நோக்கமாகும் -ஜனாதிபதி!

பொலீஸ் சிறைக்கூண்டிலிருந்து தப்பிச்சென்ற சந்தேகநபர்கள் இருவர் பொலீசாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். குருநாகல் மாவட்டம் வெல்லவ பகுதியில் இந்த சம்பவம் இன்றுஅதிகாலை இடம்பெற்றுள்ளது. காவலுக்கு இருந்த பொலீசாரைத் தாக்கிவிட்டு துப்பாக்கியொன்றை அபகரித்து சந்தேகநபர்கள் இருவரும் சிறைக்கூண்டின் கூரையின் ஊடாக வெளியேறி முச்சக்கர வண்டியொன்றில் ஏறி தப்பிச் சென்றதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களை விரட்டிச் சென்ற பொலீசார் காட்டுப்பகுதியொன்றில் வைத்து நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேகநபர்கள் இருவரும் பலியானதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். தப்பிச் சென்றவர்களின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த [...]

அரசியல் எதிர்ப்புகளை புறந்தள்ளிவிட்டு கடமையை செய்யவும்.. மனோகணேசனுக்கு மல்வத்தை பீடாதிபதி அறிவுரை! // வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்றுச் செல்வோரினால் வருமானம் உயர்வடைவு

அரசியல் எதிர்ப்புகளை புறந்தள்ளிவிட்டு கடமையை செய்யவும்.. மனோகணேசனுக்கு மல்வத்தை பீடாதிபதி அறிவுரை! // வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்றுச் செல்வோரினால் வருமானம் உயர்வடைவு

அரசியல் காரணங்களை முன்வைத்து நடத்தப்படும் எந்த எதிர்ப்புகளையும் புறந்தள்ளிவிட்டு கடமையை செய்யுமாறு கண்டி மல்வத்தை பீடாதிபதி திப்பட்டுவாவே சிறீசுமங்கள தேரர், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசனுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். கண்டி மல்வத்தை பீடத்திற்கு சென்று மகாநாயக்கரை மனோகணேசன் சந்தித்தபொழுது இந்த கருத்தை பீடாதிபதி தெரிவித்துள்ளார். இத்தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், உங்களுக்கு எதிராக கண்டி மாநகரத்தில் ஜாதிக ஹெல உறுமய கட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்ததை நானும் அறிவேன். இதுபற்றி நீங்கள் கவலைப்பட [...]

விசேட அடையாள அட்டையில்லாத வேட்பாளர்களுக்கு வாக்கெண்ணும் நிலையங்களுக்குச் செல்ல அனுமதியில்லை! // பொதுத் தேர்தலில் 85வீதமான முஸ்லிம்கள் ஆளும் கட்சிக்கே வாக்களிக்கவுள்ளனர்-அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி!

விசேட அடையாள அட்டையில்லாத வேட்பாளர்களுக்கு வாக்கெண்ணும் நிலையங்களுக்குச் செல்ல அனுமதியில்லை! // பொதுத் தேர்தலில் 85வீதமான முஸ்லிம்கள் ஆளும் கட்சிக்கே வாக்களிக்கவுள்ளனர்-அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் 85 வீதமான முஸ்லிம்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே வாக்களிக்க உள்ளனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமின் தவறான பிரசாரம் காரணமாக முஸ்லிம்கள் எதிர்தரப்பிற்கு வாக்களித்த போதும் இம்முறை மக்கள் உண்மை நிலையை உணர்ந்து ஜனாதிபதியின் கரத்தை பலப்படுத்த தீர்மானித்துள்ளனர் என அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி தெரிவித்துள்ளார். ஐ.ம.சு.முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, [...]

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர்கள் பிரச்சாரம்! // மன்னாரில் இருகட்சி ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல், ஒருவர் படுகாயம்! // நூறாவது சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அம்பாறையில் நிகழ்வுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர்கள் பிரச்சாரம்! // மன்னாரில் இருகட்சி ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல், ஒருவர் படுகாயம்! // நூறாவது சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அம்பாறையில் நிகழ்வுகள்

மன்னாரில் திங்கள் இரவு 8மணியளவில் இருகட்சி ஆதரவாளர்களுக்கிடையில நடைபெற்ற மோதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.; காயமடைந்தவர் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர் என கூறப்படுகின்றது. முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆதரவாளர்களுக்கிடையில் மன்னார் நகரில் 8 மணியளவில் நடைபெற்ற கைகலப்பு மோதலாக மாறியுள்ளது. இதில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு பொலிசார் விரைந்து கூட்டத்தினரை கலைத்துள்ளனர் மன்ன்hரில் குறித்த இரு கட்சிகளின் ஆதரவாளர்கள் மத்தியில் பாராளுமன்ற பொதுத் [...]

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் தீவிபத்து! // கிண்ணம் சின்னத்தில் போட்டியிடும் ஒருவரேனும் நாடாளுமன்றத்திற்கு தெரிவானால் நான் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்கப் போவதில்லை -அமைச்சர் மேர்வின் சில்வா

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் தீவிபத்து! // கிண்ணம் சின்னத்தில் போட்டியிடும் ஒருவரேனும் நாடாளுமன்றத்திற்கு தெரிவானால் நான் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்கப் போவதில்லை -அமைச்சர் மேர்வின் சில்வா

கிண்ணம் சின்னத்தில் போட்டியிடும் ஒருவரேனும் நாடாளுமன்றத்திற்கு தெரிவானால் தான் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்கப் போவதில்லையென அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். அவ்வாறான நிலை வந்தால் தாம் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளப் போவதில்லையென்றும் அவர் கூறியுள்ளார். ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி அவசரகால சட்ட பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றினார். இதன்போது குறுக்கிட்டுப் பேசிய போதே அமைச்சர் மேர்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் நாட்டுக்கு துரோகமிழைத்த ஜெனரல் சரத்பொன்சேகா குறித்து உரையாற்றுவதற்கு அனுமதிக்கக் கூடாதென்றும் [...]

புத்தள பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு! // பதுளை இயந்திரம் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு, இருவர் காயம்! // இரத்தினபுரி குருவிட்ட பகுதியில் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கி ஒருவர் கொலை-

புத்தள பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு! // பதுளை இயந்திரம் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு, இருவர் காயம்! // இரத்தினபுரி குருவிட்ட பகுதியில் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கி ஒருவர் கொலை-

இரத்தினபுரி குருவிட்ட பகுதியில் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பொலீஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். குறித்த நபர் இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டு இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையிலேயே உயிரிழந்திருப்பதாகவும் பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பொலீஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைதாகாத நிலையில் குருவிட்ட பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பதுளை எல்ல ஸ்பிரிங்வெல பிரதேசத்தில் கட்டிடமொன்றில் பணிபுரிந்து [...]

2015ம் ஆண்டாகும் போது வறுமை முற்றாக ஒழிக்கப்படும் -அமைச்சர் ராஜித சேனாரத்ன! // வடபுல முஸ்லிம்களுக்கு எதிர்க்கட்சி அரசியல் ஒருபோதுமே சாத்தியப்படாது -அமைச்சர் ரிசாத்

2015ம் ஆண்டாகும் போது வறுமை முற்றாக ஒழிக்கப்படும் -அமைச்சர் ராஜித சேனாரத்ன! // வடபுல முஸ்லிம்களுக்கு எதிர்க்கட்சி அரசியல் ஒருபோதுமே சாத்தியப்படாது -அமைச்சர் ரிசாத்

வடபுல முஸ்லிம்களுக்கு எதிர்க்கட்சி அரசியல் ஒருபோதுமே சாத்தியப்படாது. அரசியல் அதிகாரம் இருந்தால் மட்டுமே எமது பிரதேசத்தின் அபிவிருத்திகளை முன்னெடுத்துச் செல்ல முடியுமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளரும், மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். புத்தளம் மாவட்டம் கல்பிட்டி தில்லையூரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
2015ம் ஆண்டாகும்போது இலங்கையிலிருந்து வறுமை முற்றாக ஒழிக்கப்படும். தற்பொழுது 2வது உலக [...]

புலிகளின் சட்டப்பிரிவில் பணியாற்றிய பெண் ஒருவரும் அவரது இரு பிள்ளைகளும் கிறிஸ்மஸ்தீவில்..! // மாத்தறையின் வலஸ்முல்லை பகுதியில் இருகுழு துப்பாக்கிச்சூடு, மூவர் காயம்

புலிகளின் சட்டப்பிரிவில் பணியாற்றிய பெண் ஒருவரும் அவரது இரு பிள்ளைகளும் கிறிஸ்மஸ்தீவில்..! // மாத்தறையின் வலஸ்முல்லை பகுதியில் இருகுழு துப்பாக்கிச்சூடு, மூவர் காயம்

மாத்தறை வலஸ்முல்ல பகுதியில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று பிற்பகலில் இடம்பெற்றதாக வலஸ்முல்ல பொலீசார் தெரிவித்துள்ளனர். இரு குழுக்களிடையேயான தனிப்பட்ட பிரச்சினையே இந்த மோதலுக்குக் காரணமென்றும் பொலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வலஸ்முல்லை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
புலிகளின் சட்டப்பிரிவில் பணியாற்றிய பெண் ஒருவரும் அவரது இரு பிள்ளைகளும் கிறிஸ்மஸ்தீவில் வைத்துத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்லமுற்பட்ட 78பேர் [...]

யுத்தத்தின் பின்னரான இலங்கையில் எதிர்பார்த்தளவு அபிவிருத்தி ஏற்படுத்தப்படவில்லை -ஐ.நா செயலர்! // வன்னி யுத்தகளத்தில் களவாடப்பட்ட ஒருதொகை தங்கநகை கலேவெலவில் கண்டுபிடிப்பு

யுத்தத்தின் பின்னரான இலங்கையில் எதிர்பார்த்தளவு அபிவிருத்தி ஏற்படுத்தப்படவில்லை -ஐ.நா செயலர்! // வன்னி யுத்தகளத்தில் களவாடப்பட்ட ஒருதொகை தங்கநகை கலேவெலவில் கண்டுபிடிப்பு

யுத்தத்தின் பின்னரான இலங்கையில் எதிர்பார்த்தளவு அபிவிருத்தி ஏற்படுத்தப்படவில்லை என ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். குறிப்பாக பான் கீ மூனின் இலங்கை விஜயத்தின்போது இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்த விடயங்களில் உரிய அபிவிருத்தி எட்டப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பான் கீமூன் கடந்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கூட்டாக இணைந்து அறிக்கை ஒன்றிணை வெளியிட்டிருந்தார். குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவது தொடர்பில் தமக்கு ஆலேசானை வழங்குவதற்காக [...]

ஜே.ஆர் அரசாங்கமே இந்நாட்டில் மிகவும் திறமையாக இயங்கிவந்த கூட்டுறவு சங்கங்களை முடங்க வைத்தது -பந்துல குணவர்தன! // ஜீ.சீ.ஈ சாதாரணதர பரீட்சை முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியாகும்! // ஓட்டிசுட்டான் கற்சிலைமடு மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவுக்கல் சேதம்

ஜே.ஆர் அரசாங்கமே இந்நாட்டில் மிகவும் திறமையாக இயங்கிவந்த கூட்டுறவு சங்கங்களை முடங்க வைத்தது -பந்துல குணவர்தன! // ஜீ.சீ.ஈ சாதாரணதர பரீட்சை முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியாகும்! // ஓட்டிசுட்டான் கற்சிலைமடு மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவுக்கல் சேதம்

ஓட்டிசுட்டான் கற்சிலைமடுவில் நிறுவப்பட்டிருந்த மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவுக்கல் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் அருகாமையில் இருந்த பண்டாரவன்னியன் சிலையும் காணாமல் போய்யுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 1803ம்ஆண்டு மாவீரன் பண்டாரவன்னியன் பிரித்தானிய இராணுவ கப்டன் ஒருவரனால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தான். அன்றைய பிரித்தானிய ஆட்சியாளர்களினால் கற்சிலைமடுவில் மாவீரன் தோற்கடிக்கப்பட்டான் என்பதினை நினைவுபடுத்தும் கல் நாட்டப்பட்டு இதில் முக்கிய வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தது. நினைவுக்கல் சேதமாக்கப்பட்டமை வன்னிமக்களின் மனங்களை புண்படுத்தும் செயலாக அமைந்துள்ளது
1977ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜே.ஆர் அரசாங்கமே இந்நாட்டில் மிகவும் திறமையாக இயங்கிவந்த கூட்டுறவு சங்கங்களை முடங்க [...]