;
Athirady Tamil News

இராஜினாமா கடிதத்தை கையளிக்காவிட்டால் சட்டநடவடிக்கை – சபாநாயகர் !!

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இராஜினாமா கடிதம் இதுவரை தனக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று (13) நள்ளிரவுக்கு முதல் ஜனாதிபதி தனக்கு கடிதத்தை அனுப்புவதாக தொலைபேசி மூலம் தெரிவித்ததாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இதனால் தான் தற்போது மிகவும் அழுத்தத்துடன் இருப்பதாகவும் மிகவும் விரைவாக தனக்கு இராஜினாமா கடிதத்தை அனுப்புமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது இராஜினாமா கடிதத்தை கையளிக்காவிட்டால் அவர் பதவி விலகியதாக கருதி, தேவையான சட்டநடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.